பதிவு செய்த நாள்
29 ஆக2017
23:59
சென்னை : வட கொரியா வீசிய ஏவுகணையால், சென்னையில், ஒரு சவரன் தங்கம் விலை அதிரடியாக, 432 ரூபாய் உயர்ந்தது.
சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப, தங்க ஆபரணங்கள் விலையில், ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,795 ரூபாய்க்கும்; ஒரு சவரன், 22 ஆயிரத்து, 360 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 42.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 54 ரூபாய் உயர்ந்து, 2,849 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு அதிரடியாக, 432 ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து, 792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு, 1.10 ரூபாய் உயர்ந்து, 43.30 ரூபாய்க்கு விற்பனையானது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: வட கொரிய நாடு வீசிய ஏவுகணை, ஜப்பான் மீது பறந்து சென்ற நிலையில், அது, எங்கே விழுந்தது என, தெரியவில்லை. இதனால், சர்வதேச அளவில், அமைதி இல்லாத நிலை நீடிப்பதால், பல நாடுகளின் முதலீட்டாளர்கள், பாதுகாப்பான முதலீடு எனக் கருதி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் விளைவாக, சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளதால், உள்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|