நிதியாண்டு மாற்றத்தை கைவிட்டது மத்திய அரசுநிதியாண்டு மாற்றத்தை கைவிட்டது மத்திய அரசு ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.94 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.94 ...
மின்னணு வர்த்தக நிறுவனங்களின் ஆண்டு விற்பனைக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
00:00

புதுடில்லி : ‘மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­களின் ஆண்டு விற்­ப­னை­யில், ஒரு சப்­ளை­ய­ரின் பங்கு, 25 சத­வீ­தத்தை தாண்­டக் கூடாது’ என, மத்­திய அரசு தெளி­வு­ப­டுத்தி உள்­ளது.

‘அமே­சான், பிளிப்­கார்ட்’ போன்ற மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள், பல்­வேறு பொருட்­களை, அவற்­றின் வலை­த­ளத்­தில் விற்­பனை செய்து வரு­கின்றன. இந்­நி­று­வ­னங்­கள், பொருட்­களை தயா­ரித்து விற்­போ­ருக்­கும், அவற்றை வாங்­கு­வோ­ருக்­கும் இடையே, பால­மாக செயல்­பட்டு, இச்­சே­வைக்கு குறிப்­பிட்ட தொகையை பெற்­றுக் கொள்­கின்றன.

இந்­நி­லை­யில், மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள், ஓரிரண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டுமே விற்­பனை வாய்ப்பை வழங்­கா­மல், பல நிறு­வ­னங்­க­ளுக்­கும் வாய்ப்பு வழங்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், கடந்த ஆண்டு, மத்­திய அரசு ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டது.அதில், ‘ஒரு மின்­னணு வர்த்­தக நிறு­வ­னத்­தின் மொத்த விற்­ப­னை­யில், ஒரு சப்ளை நிறு­வ­னம் அல்­லது அதன் குழும நிறு­வ­னங்­களின் பங்கு, 25 சத­வீ­தத்­திற்கு மேல் இருக்­கக் கூடாது’ என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், இந்த விற்­ப­னைக்­கான கால அளவு குறிப்­பி­டப்­ப­டா­த­தால், அதை தெளி­வு ­ப­டுத்­து­மாறு, மின்னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள் கோரிக்கை விடுத்­தன.

இதை­ய­டுத்து, தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு அமைப்­பான, டி.ஐ.பி.பி., அனைத்து அரசு துறை­க­ளுக்­கும், அன்­னிய நேரடி முத­லீட்டு கொள்கை குறித்த சுற்­ற­றிக்­கையை அனுப்பி உள்­ளது.அதில், ‘மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள், ஒரு நிதி­யாண்­டில் மேற்­கொள்­ளும் மொத்த விற்­ப­னை­யில், ஒரு சப்ளை நிறு­வ­னம் அல்­லது அதன் கூட்டு நிறு­வ­னங்­களின் பங்கு, அதி­க­பட்­சம், 25 சத­வீ­தத்தை தாண்­டக் கூடாது’ என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­களின் விற்­பனை குறித்து, தற்­போது தெளி­வு­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள், ஒரு நிதி­யாண்­டில், ஒரு­சில நிறு­வ­னங்­களின் பொருட்­களை மட்­டுமே சந்­தைப்­ப­டுத்­தும் போக்கு, இதன் மூலம் முடி­விற்கு வரும். இத­னால், பல்­வேறு நிறு­வ­னங்­களும், ‘அமே­சான், பிளிப்­கார்ட்’ போன்ற வலை­தள சந்­தை­களில், அவற்­றின் பொருட்­களை விற்­பனை செய்ய வாய்ப்பு கிடைக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

அன்னிய நேரடி முதலீடு:
அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­க­ளுக்கு, அன்­னிய முத­லீட்டு மேம்­பாட்டு வாரி­யம் ஒப்­பு­தல் வழங்கி வந்­தது. தற்­போது, இந்த வாரி­யம் கலைக்­கப்­பட்டு விட்­ட­தால், அன்­னிய நேரடி முத­லீட்டு கொள்கை மற்­றும் அன்­னிய செலா­வணி சட்ட விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு, சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­கங்­கள், துறை­கள் ஆகி­ய­வையே, அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­க­ளுக்கு, நேர­டி­யாக ஒப்­பு­தல் வழங்க, அதி­கா­ரம் அளிக்­கப்­பட்டு உள்­ளது. இத்­து­டன், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீ­டு­க­ளுக்கு, அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள துறை­களில், வரை­ய­றுக்­கப்­பட்ட பொறுப்­பு­களை கொண்ட கூட்டு நிறு­வ­னம், நிறு­வ­ன­மாக மாற அனு­ம­திக்­கப்­படும். அது போல, ஒரு நிறு­வ­னம், வரை­ய­றுக்­கப்­பட்ட பொறுப்­பு­களை கொண்ட கூட்டு நிறு­வ­ன­மா­க­வும் ஒப்­பு­தல் வழங்­கப்­படும்
–மத்­திய தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு அமைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)