பதிவு செய்த நாள்
30 ஆக2017
15:54
புதுடில்லி : சொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி ரக கார்களுக்கான செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி.,யின் கீழ் அனைத்து கார்களுக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 1500 சிசி.,க்கும் அதிகமான திறனுடைய இன்ஜின்களை கொண்ட கார்கள், 4 மீட்டருக்கு அதிகமான நீளமுடைய எஸ்யுவி கார்களுக்கு ஜிஎஸ்டி.,யுடன் கூடுதலா 15 சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது செஸ் வரியை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனை பாதிக்காமல் இருப்பதற்காக கார்களின் விலையை குறைத்து வந்தன. தற்போது மத்திய அரசின் இந்த முடிவால் கார் நிறுவனங்கள் தங்களின் சலுகை அறிவிப்புக்களை திரும்பப் பெறும் நிலை உருவாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|