பண்­டிகை கால செலவில் தாராளம் காட்டலாமா?பண்­டிகை கால செலவில் தாராளம் காட்டலாமா? ... பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்­திய குடும்­பங்­க­ளுக்கு தேவை; எளி­மை­யான நிதிச் சேவைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2017
07:34

சரா­சரி இந்­திய இல்­லங்கள் நிதிச் சொத்­து­களில் குறைந்த முத­லீட்­டையே கொண்­டி­ருப்­பதை சுட்­டிக்­காட்டும், ரிசர்வ் வங்கி குழு, இது தொடர்பான பரிந்­து­ரை­க­ளை வழங்­கி­யுள்­ளது.

வளர்ந்த நாடு­க­ளுடன் ஒப்­பிடும் போது, இந்­திய குடும்­பங்­களில் சொத்­துகள் அமைந்­தி­ருக்கும் விதத்தில் பெரு­ம­ளவு வேறு­பாடு இருக்­கி­றது. சரா­சரி இந்­திய குடும்­பங்­களில் 95 சத­வீத சொத்­துகள் ரியல் எஸ்டேட், தங்கம், வாக­னங்கள், உப­க­ர­ணங்கள் ஆகி­ய­வற்றின் வடி­வி­லேயே அமைந்­துள்­ளன. இவற்றில், 77 சத­வீதம் ரியல் எஸ்­டேட்­டிலும், 11 சத­வீதம் தங்­கத்­திலும் உள்­ளன. 5 சத­வீதம் மட்­டுமே நிதிச் சொத்­து­க்களாக உள்ளன. இதற்கு மாறாக, வளர்ந்த நாடு­களில் குடும்­பங்­களின் வளத்தில் நிதிச் சொத்­து­களின் விகிதம் அதி­க­மாக இருக்­கி­றது.

நிதிச் சொத்­துகள்:
ரிசர்வ் வங்­கியால் நிய­மிக்­கப்­பட்ட குழு, அண்­மையில் தாக்கல் செய்­துள்ள அறிக்­கையில் இந்த தக­வல்கள் தெரி­ய­வந்­துள்­ளன.இந்­திய குடும்­பங்­களின் நிதி செயல்­பாடு குறித்து ஆய்வு செய்­வ­தற்­காக, ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு குழு ஒன்றை அமைத்­தது. பொரு­ளா­தார பேரா­சி­ரியர் தருண் ராம­துரை தலை­மை­யி­லான இந்த குழு, அண்­மையில் தன் அறிக்­கையை தாக்கல் செய்­தது. இந்த அறிக்கை, இந்­திய குடும்­பங்­களில் சொத்­துகள் அமைந்­து இ­ருக்கும் விதம், ஓய்­வூ­திய தயார் நிலை, காப்­பீடு ஆகிய அம்­சங்கள் குறித்த தக­வல்­களை அளித்­துள்­ளன.

இந்­திய குடும்­பங்­களில் நிதிச் சொத்­துகள் குறை­வாக இருப்­ப­தாக இந்த அறிக்கை தெரி­விக்­கி­றது. பெரும்­பா­லான சரா­சரி குடும்­பங்­களில் ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பவு­தீக வடி­வி­லேயே சொத்­துகள் இருக்­கின்­றன. இது, இந்­தி­யா­வுக்கு மட்டும் உரித்­தான அம்­ச­மாக கரு­தப்­படு­கிறது. மற்ற நாடு­களில் நிதிச் சொத்­து­களில் முத­லீடு விகிதம் அதி­க­மாக உள்­ளது. அது மட்டும் அல்­லாமல், இந்­திய குடும்­பங்­களின் அங்­கத்­தி­னர்­க­ளுக்கு வய­தாகும் போது கடன் சுமை அதி­க­ரிப்­ப­தா­கவும் தெரிய வந்­துள்­ளது. மேலும், பெரும்­பா­லான கடன்கள் ஈடுசெய்­யப்­ப­டா­த­வை­யாக இருப்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. வங்கி அமைப்­புக்கு வெளியில் இருந்து கடன் பெறப்­ப­டு­வதை இது உணர்த்­து­கி­றது. வளர்ந்த நாடு­களில், பொது­வாக வாழ்வின் மத்­திய கட்­டத்தில் அதிக கடன் பெறும் போக்கு இருக்­கி­றது. ஓய்வு பெறும் காலத்தில் கடனை அடைத்­து­விட்டு, நிதிச் சாத­னங்­களில் செய்த முத­லீ­டுகள் மூலம் வருவாய் பெறும் பாது­காப்பு இருக்­கி­றது.

வயோ­திக கேள்­விக்­குறி:
இந்­தி­யாவில் மட்டும் தான், வய­தாகும் நிலையில் கடன் பொறுப்பில் வீட்­டுக்­கடன் போன்ற அட­மான கடன்கள் பெரும்­ப­குதி வகிப்­ப­தா­கவும், இதனால் ஓய்­வூ­திய காலத்­திலும் கடனை அடைக்கும் நிலை தொடரும் வாய்ப்பு இருப்­பதா­கவும் அறிக்கை தெரி­விக்­கி­றது.வாழ்க்­கையில் பிந்­தைய கட்­டங்­களில் கடன் வாங்கும் போக்கு அதிகம் இருப்­ப­தா­கவும் தெரிய வந்­துள்­ளது. இதற்கு, சமூக நோக்­கி­லான அம்­சங்­களும் ஒரு கார­ண­மா­கி­றது.

பெரும்­பா­லான குடும்­பங்கள் கடன் சுமை பெறு­வ­தற்­கான முக்­கிய கார­ணங்­க­ளாக, விளைச்சல் பொய்ப்­பது, கால்­ந­டைகள் பாதிப்பு மற்றும் மருத்­துவ அவ­சர தேவைகள் உள்­ளிட்­டவை அமை­கின்­றன. இவை அனைத்­துமே காப்­பீடு மூலம் சமா­ளித்து விடக்­கூ­டி­யவை எனும் போது, இந்­திய குடும்­பங்கள் போதிய காப்­பீடு பெறாமல் இருப்­பது ஏன் எனும் கேள்வி எழு­கி­றது. காப்­பீடு தொடர்­பான விழிப்­பு­ணர்வு பர­வ­லாக இருந்­தாலும், அவற்றை பெறு­வதில் சிக்கல் இருக்­கி­றது.

எளிய தீர்­வுகள்:
இத்­த­கைய அம்­சங்­களை ஆய்வு செய்­துள்ள குழு, சேமிப்பின் பெரும் ­ப­கு­தியை நிதிச் சாத­னங்­களை நோக்கி திருப்­பு­வது, குடும்­பங்­க­ளுக்கு நலன் பயக்கும் என்று தெரி­வித்­துள்­ளது. இதற்­காக, அரசு தரப்பில் மேற்­கொள்ள வேண்டிய நட­வ­டிக்­கை­க­ளையும் பரிந்­து­ரைத்­துள்­ளது. நிதிச் சேவை­களை எளி­மை­யாக்கி அனை­வ­ரையும் பங்­கேற்க செய்ய வேண்டும் என்றும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. காப்­பீட்டு துறை­யிலும் எளி­மை­யான, செலவு குறைந்த இல்ல காப்­பீடு உள்­ளிட்ட திட்­டங்கள் தேவை என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

வீட்டுக் கடன்­க­ளுக்­கான வட்டி விகிதம் ரெப்போ விகி­தத்­துடன் இணைக்­கப்­பட்டு, வட்டி குறைப்பின் பலன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளிக்­கப்­பட வேண்டும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ரியல் எஸ்டேட் மற்றும் தங்­கத்தில் அதிக முத­லீடு செய்யும் நிலை தொடர்ந்தால், வரும் ஆண்­டு­களில் இவற்­றுக்­கான தேவை மேலும் அதி­க­ரிக்கும் என்­ப­தோடு, போதிய காப்­பீடு மற்றும் ஓய்­வூ­திய திட்டம் இல்­லாமல் இருப்­பது குடும்­பங்­களுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய இல்­லங்­களின் நிதி :
* ரியல் எஸ்டேட், தங்கம் போன்­ற­வற்றில் தான் அதிகம் முத­லீடு செய்­யப்­ப­டு­கி­றது* நிதிச் சாத­னங்­களில் முத­லீடு குறை­வாக உள்­ளது* காப்­பீடு மற்றும் ஓய்­வூ­திய திட்ட பாது­காப்பு குறைவு* எளி­மை­யான நிதிச் சேவைகள் அவ­சியம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)