பதிவு செய்த நாள்
17 செப்2017
03:43
டொயொட்டா நிறுவனம், குறிப்பிட்ட சில மாடல் கார்கள் மற்றும் எஸ்.யு.வி.,களின் விலையை திடீரென உயர்த்தி உள்ளது.ஜி.எஸ்.டி., கவுன்சிலில், நடுத்தர ரக கார்களுக்கு, 45 சதவீதம்; பெரிய கார்களுக்கு, 48 சதவீதம் மற்றும் எஸ்.யு.வி.,களுக்கு, 50 சதவீதம் வரை, 'செஸ்' வரி உயர்த்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த விலை உயர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது.டொயொட்டா அதன் தயாரிப்புகளில், அதிக விற்பனையாகும், 'இன்னோவா' எம்.யு.வி., 'பார்ச்சூனர்' எஸ்.யு.வி., மற்றும், 'இடியோஸ்' செடான் கார் ஆகியவற்றின் விலையை, 2 - 7 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதன்படி, கிரிஸ்டா வாகனத்தின் விலை, குறைந்தபட்சம், 78 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. பார்ச்சூனரின் விலை, குறைந்தபட்சம், 1.6 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 'கரோல்லா, ஆல்டிஸின்' விலை, 72 ஆயிரம் ரூபாய்; 'பிளாட்டினம், இடியாஸ்' காரின் விலை,13 ஆயிரம் ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும், 'இடியாஸ் லிவா' மற்றும் 'கேம்ரி, ஹைப்ரிட்' ரக கார்களின் விலை உயர்த்தப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|