பருப்பு  ஏற்றுமதிக்கு  தடை நீக்கம்பருப்பு ஏற்றுமதிக்கு தடை நீக்கம் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ...
கைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2017
03:48

புதுடில்லி : கடந்த ஆகஸ்ட் மாதம், நாட்­டின் ஏற்­று­மதி, 10.29 சத­வீ­தம் உயர்ந்து, 2,381 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. மூன்று மாதங்­க­ளுக்கு பின், டாலர் அடிப்­ப­டை­யிலான ஏற்­று­மதி, மீண்­டும் இரட்டை இலக்க வளர்ச்­சியை எட்­டி­யுள்­ளது.'கடந்த 2016 செப்., முதல், ஏற்­று­மதி தொடர்ந்து, 12 மாதங்­க­ளாக வளர்ச்சி கண்டு வரு­கிறது' என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.மதிப்­பீட்டு மாதத்­தில், ரசா­ய­னங்­கள், பொறி­யி­யல் சாத­னங்­கள், பெட்­ரோ­லிய பொருட்­கள் ஆகி­யவை, ஒட்­டு­மொத்த ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்­ளன.பொறியியல் சாதனங்கள்ஆகஸ்­டில், ரசா­ய­னங்­கள் ஏற்­று­மதி, 32.41 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. அது­போல பெட்­ரோ­லி­யப் பொருட்­கள் ஏற்­று­ம­தி­யும், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உயர்ந்­துள்­ளது. இத்­து­றை­யின் ஏற்­று­மதி, 36.56 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது. பொறி­யி­யல் சாத­னங்­கள் ஏற்­று­மதி, 19.53 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.அதே­ச­ம­யம், கைவி­னைப் பொருட்­கள், பழங்­கள், காய்­க­றி­கள், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறை­கள், ஏற்­று­மதி வளர்ச்­சி­யில், பின்­ன­டை­வைக் கண்­டுள்­ளன.நடப்பு 2017 - 18ம் நிதி­யாண்­டின், ஏப்., - ஆக., வரை­யி­லான ஐந்து மாதங்­களில், ஏற்­று­மதி, 8.57 சத­வீ­தம் அதி­க­ரித்து, 11,857 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இதே காலத்­தில், இறக்­கு­ம­தி­யும், 26.63 சத­வீ­தம் உயர்ந்து, 18,171 கோடி டால­ராக ஏற்­றம் கண்­டுள்­ளது. இத­னால், வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 6,314 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.இறக்­கு­மதிகடந்த ஆகஸ்­டில், நாட்­டின் இறக்­கு­மதி, 21.02 சத­வீ­தம் அதி­க­ரித்து, 3,546 கோடி டால­ராக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 2,930 கோடி டால­ராக இருந்­தது. இதே காலத்­தில், வர்த்­தக பற்­றாக்­குறை, 770 கோடி டால­ரில் இருந்து, 1,164 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. தங்­கம் இறக்­கு­மதி, 69 சத­வீ­தம் உயர்ந்து, 188 கோடி டால­ராக அதி­க­ரித்­ததே, இதற்கு கார­ணம்.'நாட்­டின் ஏற்­று­மதி தொடர்ந்து, 12 மாதங்­க­ளாக வளர்ச்சி கண்டு வரு­வது, பல்­வேறு துறை­க­ளுக்கு சாத­க­மான அம்­ச­மாக உள்­ளது' என, மத்­திய வர்த்­த­க அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.
கவலை அளிக்­கிறதுஏற்­று­மதி வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்­கிறது. ஆனால், ஜி.எஸ்.டி., திட்­டத்­தின் கீழ் முன்­கூட்­டிய வரி செலுத்­து­வ­தால், நடை­முறை மூல­த­னப் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. அத­னால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் புதிய, 'ஆர்­டர்'கள் எடுப்­பதை நிறுத்­தி­யுள்­ள­னர். ஜூலை முதல் செலுத்­திய வரி எப்­போது திரும்­பக் கிடைக்­கும் என, உறு­தி­யாக தெரி­ய­வில்லை. இந்த பிரச்­னை­யு­டன், ரூபாய் மதிப்பு உயர்வு, சர்­வ­தேச நில­வ­ரம் போன்ற அம்­சங்­கள், அக்­டோ­பர் மாத ஏற்­று­ம­தி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பது கவலை அளிக்­கிறது.கணேஷ் குப்தா,தலைவர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)