பதிவு செய்த நாள்
18 செப்2017
00:10
ரிசர்வ் வங்கி அண்மையில் தனியார் துறை வங்கியான எச்.டி.எப்.சி., வங்கியை, உள்ளூரில் அமைப்பு நோக்கில் முக்கிய வங்கியாக ( டிஎஸ்.ஐ.பி.,) வகைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகியவை இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது வங்கியாக, எச்.டி.எப்.சி., வங்கி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் முக்கியத்துவம் என்ன?
என்ன பொருள்?பலவகையான வங்கிகள் இருக்கின்றன. வங்கிகள் நோக்கம், அளவு, செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. இவைத்தவிர, வங்கிகளின் பெரிய அளவு, பல துறைகளில் பரவிய செயல்பாடு, சிக்கலான தன்மை மற்றும் இணைப்பு தொடர்புகள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி, குறிப்பிட்ட சில வங்கிகளை மிக முக்கிய வங்கியாக வகைப்படுத்துகிறது.
2008 நிதிப்பாடம்:கடந்த, 2008ம் ஆண்டு அமெரிக்காவில் முதலீட்டு வங்கிகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு, அதன் விளைவாக உலக பொருளாதாரம் தடுமாறத் துவங்கியதன் விளைவாக, திவாலாக முடியாத வங்கிகளை அடையாளம் காணும் முறை அமலுக்கு வந்தது. அதன் படி ரிசர்வ் வங்கியும், 2014ல் இதற்கான நெறிமுறையை வெளியிட்டு, 2015 முதல் இந்த பட்டியலில் இடம்பெறும் வங்கிகளை அறிவித்து வருகிறது.
என்ன பலன்?திவாலாக முடியாத வங்கிகள் என வகைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கு நெருக்கடி காலங்களில் அரசின் ஆதரவு இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இதன் காரணமாக இவற்றுக்கு நிதி திரட்டுவதில் சாதகங்கள் உள்ளன. ஆனால், முக்கிய வங்கிகள் என்பதால் இவற்றுக்கான கட்டுப்பாடுகளும் தீவிரமானவை. மற்ற வங்கிகளை விட இவை, அதிக அளவில் நிதி முதலீடு கொண்டிருக்க வேண்டும். இவற்றுக்கான கொள்கை நெறிமுறைகளும் தீவிரமானவை.
திவாலாக முடியாதவை!மிக முக்கிய வங்கியாக வகைப்படுத்தப்படும் வங்கிகள் (டிஎஸ்.ஐ.பி.,) பொதுவாக, ‘டூ பிக் டு பைல்’ என குறிப்பிடப்படுகின்றன. அதாவது இவை திவாலாக அனுமதிக்க முடியாதவை என பொருள். இந்த வகை வங்கிகளை திவாலாக அனுமதித்தால், அவற்றுக்கு மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால், இப்படி குறிப்பிடப்படுகின்றன. நெருக்கடி ஏற்படும் போது இவற்றை பாதுகாக்க, அரசு முன்வரும் என்பது எதிர்பார்ப்பு.
பல பிரிவுகள்:ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இந்த வகை வங்கிகளின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த வகையிலும், ஐந்து வகை பிரிவுகள் இருக்கின்றன. எச்.டி.எப்.சி., வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதல் பிரிவில் உள்ளன. ஸ்டேட் வங்கி மூன்றாவது பிரிவில் உள்ளது. எண்ணிக்கையின் அளவு முக்கியத்துவத்தின் அளவை குறிக்கும். ஜி.டி.பி.,யில் 2 சதவீத அளவுக்கு மேல் இவை சொத்துக்களை கொண்டிருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|