பதிவு செய்த நாள்
19 செப்2017
05:06
கோவை : ‘பருத்தி விலை உயர்வால், ஆறு மாதங்களாக பாதிப்பில் இருந்த பருத்தி நுாலிழை துறை, வரவிருக்கும் பண்டிகை காலத்தையொட்டி எழுச்சி காணும்’ என, தென்னிந்திய ஜவுளி ஆலைகள் சங்கமான, ‘சிமா’ தெரிவித்து உள்ளது.
இது குறித்து, ‘சிமா’ வெளியிட்டுள்ள அறிக்கை: சர்வதேச பருத்தி பயிர் பரப்பு, 11 சதவீதம் அதிகரித்து உள்ளதால், 2017 – 18ம் பருவத்தில், அதன் உற்பத்தி உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில், சாதகமான பருவமழை, சிறப்பான தட்பவெப்பம் மற்றும் 15 சதவீதம் உயர்ந்துள்ள பருத்தி பயிர் பரப்பு காரணமாக, அதன் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆறு மாதங்களாக உயர்ந்திருந்த பருத்தி விலை, இனி குறையும். மேலும், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருவதையொட்டி, பருத்தி மற்றும் பருத்தி நுாலிழையின் தேவை அதிகரிக்கும்.
ஏற்கனவே, பிவாண்டி, இச்சால்கரன்ஜி, கோல்கட்டா ஆகிய நகரங்களில், பண்டிகை கால ஜவுளிகள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.நுாற்பாலைகளில், நுாலிழையின் தேக்கமும் குறைந்து உள்ளது. எனவே, வரும் வாரங்களில், பருத்தி நுாலிழை துறை, சுறுசுறுப்பாக செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கடும் போட்டி:
சர்வதேச சந்தையில், தேவை குறைந்து உள்ளதால், மூன்று ஆண்டுகளாக, இந்திய ஜவுளி மற்றும் ஆடைகள் துறை வளர்ச்சி மந்தமாக உள்ளது. இதற்கு, தாராள வர்த்தக ஒப்பந்தம் மூலம், குறைந்த விலையில் ஜவுளி ஏற்றுமதி செய்யும், வியட்நாம், வங்கதேசம் ஆகிய நாடுகளும் காரணம். இந்திய ஜவுளிகளுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிக வரி விதிக்கின்றன. இதனால், ஏற்றுமதியில் கடும் போட்டியை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
– பி.நட்ராஜ், தலைவர், தென்னிந்திய ஜவுளி ஆலைகள் சங்கம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|