பதிவு செய்த நாள்
19 செப்2017
10:44
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 9வது நாளாக உயர்வுடன் ஆரம்பமான நிலையில் சற்றுநேரத்திலேயே சரிவை சந்தித்தன. நேற்றைய வர்த்தகத்தின் போது தேசிய பங்குச்சந்தையின் நிப்டி புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்றும்(செப்., 19) புதிய உச்சத்துடன் ஆரம்பமானது.
முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.35 புள்ளிகள் உயர்ந்து 32,524.11-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 25.85 புள்ளிகள் உயர்ந்து 10,171.70-ஆக வர்த்தகமானது. ஆனால் இந்த ஏற்றம் தொடர்ந்து நீடிக்கவில்லை.
கடந்தநாட்களில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. காலை 10.42 மணியளவில் சென்செக்ஸ் 53.07 புள்ளிகள் சரிந்து 32,370.69-ஆகவும், நிப்டி 16.35 புள்ளிகள் சரிந்து 10,136.75-ஆகவும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|