பதிவு செய்த நாள்
28 செப்2017
05:37
மும்பை : பொதுமக்களிடையே, ‘கிரெடிட் கார்டு’ பயன்பாடு அதிகரித்து வருவதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இது குறித்து, டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நகர்ப்புறத்தைச் சேர்ந்த, 1,088 பேரிடம், ‘கிரெடிட் கார்டு’ பயன்பாடு குறித்து, ஜூலை 13 – 18 வரை, ‘ஆன் – லைன்’ மூலம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 57 சதவீதத்தினர், ஓராண்டுக்கு முன் பயன்படுத்தியதை விட, தற்போது, அதிகளவில், கிரெடிட் கார்டை உபயோகிப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும், 19 சதவீதத்தினர், எதிர்காலத்தில், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.ஓராண்டில், 59 சதவீதத்தினர், கட்டணங்களை செலுத்துவதற்கும்; 53 சதவீதத்தினர், பெரிய கொள்முதலுக்காகவும்; 45 சதவீதத்தினர், தள்ளுபடி மற்றும் பிற சலுகைகளுக்காகவும், கிரெடிட் கார்டை பயன்படுத்தி உள்ளனர்.மேலும், 18 – 24 வயதுடையோரில், 24 சதவீதத்தினர், பணத்தை எடுத்துச் செல்வதை விரும்பாததால், கிரெடிட் கார்டை உபயோகிப்பதாக கூறினர்.ஆய்வில், 45 வயதுக்கு மேற்பட்டோரில், 33 சதவீதத்தினர், பொருட்களை உடனே வாங்கி, பணத்தை, பின் செலுத்தலாம் என்ற காரணத்திற்காக, கிரெடிட் கார்டை பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|