பதிவு செய்த நாள்
29 செப்2017
05:01
மும்பை, செப். 29–‘மின்னணு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், சர்வதேச மருந்து நிறுவனங்களை விட, இந்திய மருந்து நிறுவனங்கள், மிகவும்பின்தங்கி உள்ளன’ என, இ.ஒய்., நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதன் விபரம்:மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டில், ஐந்து நிலைகளின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 53 சதவீத நிறுவனங்கள், இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளது தெரிய வந்துள்ளது. பிற்போக்கு கொள்கைகளை, 40 சதவீத நிறுவனங்கள்பின்பற்றுகின்றன. மின்னணுதொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, 7 சதவீதநிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளன.அதே சமயம், மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டில், சர்வதேச மருந்து நிறுவனங்கள், பல நிலைகள் முன்னேறி விட்டன.ஆய்வில், 80 சதவீத நிறுவனங்களின் வர்த்தக கொள்கையில், மின்னணு இன்னும் முக்கிய இடத்தை பெறவில்லை; திடமான கொள்கையின்றி, 93 சதவீத நிறுவனங்கள், இன்னும் தனிப்பட்ட செயல்பாடுகளுடன்போராடிக் கொண்டு இருக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|