தொழில் துறையினருடன் அமைச்சர் ஜெட்லி சந்திப்புதொழில் துறையினருடன் அமைச்சர் ஜெட்லி சந்திப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.34 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.34 ...
அடுத்த 10 ஆண்டுகளில்... மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6 லட்சம் கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2017
05:03

மும்பை : ‘இந்­தியா, வேக­மாக மின்­னணு மய­மாகி வரு­வ­தால், அடுத்த, 10 ஆண்­டு­களில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்பு, 6 லட்­சம் கோடி டால­ராக உய­ரும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.சர்­வ­தேச நிதிச் சேவை நிறு­வ­ன­மான, மார்­கன் ஸ்டான்லி, ‘இந்­திய மின்­னணு துறை­யின் பர­வ­லாக்­கம் மற்­றும் பல லட்­சம் கோடி டாலர் வாய்ப்பு’ என்ற ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.அதன் விப­ரம்:இந்­தி­யா­வில், மின்­னணு பயன்­பாடு வேக­மாக பரவி வரு­வ­தால், அடுத்த, 10 ஆண்­டு­களில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 0.5 – 0.75 சத­வீ­தம்வளர்ச்சி காணும். அதன் அடிப்­ப­டை­யில், 2026 – 27ல், 6 லட்­சம் கோடி டாலர் மதிப்­பி­லான, பொரு­ளா­தார வளர்ச்­சி­யு­டன், உயர் நடுத்­தர வரு­வாய் பிரி­விற்கு, இந்­தியா உய­ரும்.ஜி.எஸ்.டி., அறி­மு­கம் கார­ண­மாக, துவக்­கத்­தில், சில பிரச்­னை­கள் இருந்­தா­லும், 2018 முதல், பொரு­ளா­தார வளர்ச்சி சூடு­பி­டிக்­கும். இதன் மூலம், உல­கின் மிகப்­பெ­ரிய ஐந்து பங்­குச் சந்­தை­களில் ஒன்­றாக, இந்­தியா உய­ரும்.வரும், 20௨7ல், 1.80 லட்­சம்கோடி டாலர் சந்தை மதிப்­பு­டன், உல­கின் மூன்­றா­வது நிதிச் சேவை­கள் நாடு என்ற சிறப்பை பெறும்.அடுத்த, 10 ஆண்­டு­களில், நுகர்­வோர் துறை­களில், 1.50 லட்­சம் கோடி டாலர் முத­லீடு குவி­யும். இதே காலத்­தில், ஒட்­டு­மொத்த அன்­னிய நேரடி முத­லீடு, தற்­போ­தைய, 6,400 கோடி டால­ரில் இருந்து, இரு மடங்கு உயர்ந்து, 12 ஆயி­ரம் கோடி டால­ராக அதி­க­ரிக்­கும்.பங்­குச் சந்­தை­களில், உள்­நாட்­டி­ன­ரின் பங்­க­ளிப்பு உய­ரும். 10 ஆண்­டு­களில், குடும்­பங்­கள் மற்­றும் அன்­னிய நிதி நிறு­வ­னங்­களின் பங்கு முத­லீடு, முறையே, 6,000 கோடி டாலர் மற்­றும் 12 ஆயி­ரம் கோடி டால­ராக உள்­ளது; இது, அடுத்த, 10 ஆண்­டு­களில், முறையே, 42 ஆயி­ரம் கோடி டாலர் மற்­றும் 52,500 கோடி டால­ராக அதி­க­ரிக்­கும்.அடுத்த, 10 ஆண்­டு­களில், பண­வீக்­கம் சார்ந்த மற்­றும் சாராத, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, ஆண்­டுக்கு, முறையே 7.1 சத­வீ­தம் மற்­றும் 11.2 சத­வீ­த­மாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.இந்­தி­யா­வின் வளர்ச்சி தொட­ரும் என, நம்­பிக்கை தெரி­வித்­துள்ள போதி­லும், அர­சி­யல் ஸ்தி­ரத்­தன்மை, ‘ஆதார்’ சார்ந்த, தனி மனித உரிமை வழக்கு, ஜி.எஸ்.டி., அம­லாக்­கம் உள்­ளிட்ட, ஒரு­சில இடர்ப்­பா­டு­களும் உள்­ள­தாக, ‘மார்­கன் ஸ்டான்லி’ தெரி­வித்­துள்­ளது.
இடர்ப்பாடும் உள்ளதுஉச்ச நீதி­மன்­றம் சமீ­பத்­திய தீர்ப்­பில், ‘தனி மனித சுதந்­தி­ரம் என்­பது, ஒவ்­வொ­வ­ருக்­கும் உள்ள அடிப்­படை உரிமை’ என, தெரி­வித்­துள்­ளது. அத­னால், ‘ஆதார்’ விப­ரங்­களை கோரு­வது, தனி மனித உரி­மை­களை பறிக்­கிறது என்ற வாதத்தை, தனி­யார் அமைப்­பு­கள் தொடர்ந்து முன்­வைக்­கும். இந்த வழக்­கு­களில், ஏதே­னும் மாறு­பட்ட தீர்ப்பு வந்­தால், இந்­தி­யா­வின் வளர்ச்­சிக்கு, பின்­பு­ல­மாக உள்ள, முக்­கிய காரணி ஒன்­றின் ஊக்­கு­விப்பை, இழக்க நேரி­டும்ரிதம் தேசாய், இந்திய ஆய்வு பிரிவின் தலைவர், மார்கன் ஸ்டான்லி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)