பதிவு செய்த நாள்
29 செப்2017
05:03
மும்பை : ‘இந்தியா, வேகமாக மின்னணு மயமாகி வருவதால், அடுத்த, 10 ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 6 லட்சம் கோடி டாலராக உயரும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான, மார்கன் ஸ்டான்லி, ‘இந்திய மின்னணு துறையின் பரவலாக்கம் மற்றும் பல லட்சம் கோடி டாலர் வாய்ப்பு’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.அதன் விபரம்:இந்தியாவில், மின்னணு பயன்பாடு வேகமாக பரவி வருவதால், அடுத்த, 10 ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.5 – 0.75 சதவீதம்வளர்ச்சி காணும். அதன் அடிப்படையில், 2026 – 27ல், 6 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான, பொருளாதார வளர்ச்சியுடன், உயர் நடுத்தர வருவாய் பிரிவிற்கு, இந்தியா உயரும்.ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, துவக்கத்தில், சில பிரச்னைகள் இருந்தாலும், 2018 முதல், பொருளாதார வளர்ச்சி சூடுபிடிக்கும். இதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஐந்து பங்குச் சந்தைகளில் ஒன்றாக, இந்தியா உயரும்.வரும், 20௨7ல், 1.80 லட்சம்கோடி டாலர் சந்தை மதிப்புடன், உலகின் மூன்றாவது நிதிச் சேவைகள் நாடு என்ற சிறப்பை பெறும்.அடுத்த, 10 ஆண்டுகளில், நுகர்வோர் துறைகளில், 1.50 லட்சம் கோடி டாலர் முதலீடு குவியும். இதே காலத்தில், ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு, தற்போதைய, 6,400 கோடி டாலரில் இருந்து, இரு மடங்கு உயர்ந்து, 12 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும்.பங்குச் சந்தைகளில், உள்நாட்டினரின் பங்களிப்பு உயரும். 10 ஆண்டுகளில், குடும்பங்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, முறையே, 6,000 கோடி டாலர் மற்றும் 12 ஆயிரம் கோடி டாலராக உள்ளது; இது, அடுத்த, 10 ஆண்டுகளில், முறையே, 42 ஆயிரம் கோடி டாலர் மற்றும் 52,500 கோடி டாலராக அதிகரிக்கும்.அடுத்த, 10 ஆண்டுகளில், பணவீக்கம் சார்ந்த மற்றும் சாராத, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, ஆண்டுக்கு, முறையே 7.1 சதவீதம் மற்றும் 11.2 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவின் வளர்ச்சி தொடரும் என, நம்பிக்கை தெரிவித்துள்ள போதிலும், அரசியல் ஸ்திரத்தன்மை, ‘ஆதார்’ சார்ந்த, தனி மனித உரிமை வழக்கு, ஜி.எஸ்.டி., அமலாக்கம் உள்ளிட்ட, ஒருசில இடர்ப்பாடுகளும் உள்ளதாக, ‘மார்கன் ஸ்டான்லி’ தெரிவித்துள்ளது.
இடர்ப்பாடும் உள்ளதுஉச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பில், ‘தனி மனித சுதந்திரம் என்பது, ஒவ்வொவருக்கும் உள்ள அடிப்படை உரிமை’ என, தெரிவித்துள்ளது. அதனால், ‘ஆதார்’ விபரங்களை கோருவது, தனி மனித உரிமைகளை பறிக்கிறது என்ற வாதத்தை, தனியார் அமைப்புகள் தொடர்ந்து முன்வைக்கும். இந்த வழக்குகளில், ஏதேனும் மாறுபட்ட தீர்ப்பு வந்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கு, பின்புலமாக உள்ள, முக்கிய காரணி ஒன்றின் ஊக்குவிப்பை, இழக்க நேரிடும்ரிதம் தேசாய், இந்திய ஆய்வு பிரிவின் தலைவர், மார்கன் ஸ்டான்லி
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|