பதிவு செய்த நாள்
08 அக்2017
04:30
புதுடில்லி : ஜி.எஸ்.டி., விதிகளை தளர்த்தி, பல்வேறு பொருட்களுக்கு வரியை குறைத்து, கணக்கு தாக்கல்செய்வதை சுலபமாக்கிய,ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு, சிறு, நடுத்தரநிறுவனங்கள் பாராட்டு தெரிவித்து உள்ளன.நேற்று முன்தினம்,ஜி.எஸ்.டி., கவுன்சில்கூட்டத்தில், ‘பிராண்டு’அல்லாதநொறுக்குத் தீனிகள், ஆயுர்வேத மருந்துகள் உட்பட, 60க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரியை, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க, முடிவு செய்யப்பட்டது.மேலும், ‘காம்போசிஷன்’ எனப்படும், கலவை வரிதிட்டத்தில், விற்றுமுதல் வரம்பு, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரியை, விரைவாகதிரும்பத் தரவும், அவர்கள், நடப்பு நிதியாண்டு வரை, விலக்களிக்கப்பட்ட பிரிவின் கீழ், 0.1 சதவீதம் மட்டும், ஜி.எஸ்.டி., செலுத்தவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.இது போல அறிவிக்கப்பட்டுள்ள பல சலுகைகளை, தொழில் துறையினர்வரவேற்று உள்ளனர்.சந்திரஜித் பானர்ஜி,டைரக்டர் ஜெனரல், இந்திய தொழிலக கூட்டமைப்பு:கலவை வரி திட்டத்தில், விற்றுமுதல், 75 லட்சம் ரூபாயில் இருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதன் மூலம், சிறிய, நடுத்தரநிறுவனங்கள், மிகப்பெரிய அளவில் பயன் பெறும்.ஆண்டுக்கு, 1.50 கோடி ரூபாய் வரை, விற்றுமுதல்உள்ள நிறுவனங்கள்,காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், சிறு, நடுத்தரநிறுவனங்கள், மாதாந்திர கணக்கு தாக்கல் செய்யும் தொல்லையில் இருந்துவிடுபடும்.மேலும், ‘ரிவெர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்’ திட்டம், 2018 மார்ச் வரை, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பதிவு பெற்ற பெரிய நிறுவனங்கள், பதிவு செய்யாத சிறிய, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து, பொருட்களை தடையின்றி கொள்முதல் செய்யும்.‘ஏசி’ உணவகங்களுக்கான வரியை, 18 சதவீதத்தில் இருந்து,12 சதவீதமாக குறைக்கும் திட்டம், பொருளாதாரவளர்ச்சிக்கு உதவும்.
ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சிஇந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர், கணேஷ் குமார் குப்தா கூறியதாவது:ஏற்றுமதியாளர்கள், ஜூலை – ஆகஸ்டில் செலுத்திய, ஜி.எஸ்.டி., 10 மற்றும் 18ம் தேதி, திரும்பத் தரப்படும் என்ற அறிவிப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், முன்கூட்டியே வரியை செலுத்தி, நடைமுறை மூலதன தேவையை சமாளிக்க முடியாமல் திணறி வரும் ஏற்றுமதியாளர்கள், நிம்மதி பெருமூச்சு விடுவர். அது போல, ஏற்றுமதியாளர்களுக்கு என, அறிமுகமாக உள்ள, ‘இ – வாலட்’ திட்டமும், நிதி பிரச்னைக்கு தீர்வளிக்கும். ஏற்றுமதி மண்டல நிறுவனங்கள் உட்பட, சிறப்பு பிரிவைச் சேர்ந்த நிறுவனங்கள், இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களுக்கும், உள்நாட்டில் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கும், ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும், ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., மற்றும் தீர்வையை செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|