பதிவு செய்த நாள்
08 அக்2017
04:30
சென்னை, அக். 8–பாரத ஸ்டேட் வங்கியின், ‘கிரெடிட்’ கார்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 50 லட்சத்தை கடந்துள்ளது.இது குறித்து, அவ்வங்கி வெளியிட்டுள்ள செய்தி:எஸ்.பி.ஐ., ‘கிரெடிட்’ கார்டுகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 50 லட்சத்தை எட்டியிருப்பது, எங்கள் மீது, வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஓராண்டில் மட்டும், 10 லட்சம் பேர், எஸ்.பி.ஐ., கார்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும், கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் வர்த்தகம், 3,500 கோடி ரூபாயில் இருந்து, 4,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த தளத்தில், நாட்டில், நான்காவது இடத்தில் இருந்து, இரண்டாமிடத்திற்கு உயர்ந்து இருப்பது, பெருமை அளிப்பதாக உள்ளது. அடுத்த ஆண்டு, 30 சதவீதம் வளர்ச்சி பெற முடியும் என, நம்புகிறோம். சமீபத்தில், இள வயது வாடிக்கையாளர்களுக்காக, எஸ்.பி.ஐ., கார்டு, ‘பிரைம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|