பதிவு செய்த நாள்
09 அக்2017
00:09
பண்டிகை காலத்தை முன்னிட்டு, இ – காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதால், பொருட்களை கொண்டு சேர்க்கும் டெலிவரி சேவையை வழங்கு பவர்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விற்பனை சூடுபிடித்துள்ளது. இணையத்திலும் இ – காமர்ஸ் நிறுவனங்கள் பண்டிகை கால சலுகைகளை அளித்து விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. அமேசான், பிளிப்கார்ட், ஸ்னேப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவில் விளம்பரமும் செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இதனால், இ – காமர்ஸ் மூலமான விற்பனை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, 40 சதவீதம் கூடுதல்
விற்பனை நடைபெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. விற்பனை அதிகரித்து இருப்பதால் பொருட்களை கொண்டு சேர்க்கும் டெலிவரி சேவை வழங்குபவர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு தளங்களிலும் இந்த பணிகளுக்கான வரவேற்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|