பதிவு செய்த நாள்
18 அக்2017
23:51
புதுடில்லி : மத்திய அரசு, 'ஆன்லைன்' மருந்து விற்பனை தொடர்பான கொள்கையை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வலைதள மருந்து விற்பனை கொள்கைபடி, வலைதள மருந்து விற்பனை நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். வலைதள மருந்து நிறுவனங்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டின் அடிப்படையிலேயே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். இதற்காக, காகித வடிவிலான மருத்துவர் சீட்டையும், அதன் 'ஸ்கேன்' பிரதியையும், பராமரிக்க வேண்டும். சாதாரண மருந்து முதல் தவறாக பயன்படக்கூடிய அபாயகரமான மருந்து வரை, ஐந்து பிரிவுகளில் மருந்து விற்பனையை வகைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஒரு மருத்துவர் சீட்டில், குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகளை ஒருமுறை மட்டுமே விற்க முடியும். அதே சீட்டை திரும்பத் திரும்ப பயன்படுத்த முடியாது. அதேசமயம், மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்தில், அதன் அடிப்படையில் மருந்துகளை விற்கலாம். முக்கிய மருந்துகளின் விற்பனையில், வாங்குவோரின் பெயர், முகவரியுடன் ‘ஆதார்’ விபரங்களும் கோரப்படும். மருத்துவ சீட்டில், மருந்து விற்பனை செய்யப்பட்டதை குறிக்கும் முத்திரையை இட்டு, அதை மின்னணு வடிவிலும் ஆவணப்படுத்த வேண்டும். இதுபோல பல கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஆன்லைன் மருந்து விற்பனை கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போது, 50க்கும் அதிகமான 'ஆன்லைன்' நிறுவனங்கள், மருந்து விற்பனையில், ஈடுபட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களின் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் கொள்கைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|