மாருதி சுசூகி நிறுவனம் நிகர லாபம் ரூ.2,484 கோடிமாருதி சுசூகி நிறுவனம் நிகர லாபம் ரூ.2,484 கோடி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ...
‘விர்ச்சுவல் கரன்சி’க்கு அனுமதியில்லை: ரிசர்வ் வங்கி தன்னிலை விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2017
23:41

மும்பை : ‘விர்ச்­சு­வல் கரன்சி பரி­வர்த்­த­னைக்கு, இந்­தி­யா­வில் அனு­ம­தி­யில்லை. இவ்­வகை கரன்­சி­யில் நடை­பெ­றும் முறை­கே­டான வர்த்­த­கம், முத­லீ­டு­கள் குறித்த விப­ரங்­கள் எது­வும் தெரி­யாது’ என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.

‘விர்ச்­சு­வல் கரன்சி’ எனப்­படும், மெய்­நி­கர் கரன்­சி­களின் பரி­வர்த்­த­னை­கள், இணை­யத்­தில் மட்­டுமே நடக்­கின்றன. ‘பிட்­காய்ன், எரித்­ரியா’ போன்ற, பல வகை­யான மெய்­நி­கர் கரன்­சி­கள், இணை­யத்­தில் புழங்­கு­கின்றன.

மதிப்பு கிடையாது:
தனி­யார் நிறு­வ­னங்­கள் வெளி­யி­டும் இந்த வகை கரன்­சி­க­ளுக்கு, சட்­ட­பூர்வ மதிப்பு கிடை­யாது. இந்த கரன்­சி­களின் பரி­வர்த்­த­னையை கட்­டுப்­ப­டுத்த, எந்­த­வொரு ஒழுங்­கு­முறை அமைப்­பும் இல்லை. இருந்த போதி­லும், சில ஆண்­டு­க­ளாக, வலை­த­ளங்­களில், ‘பிட்­காய்ன்’ போன்ற, அங்­கீ­கா­ர­மற்ற மின்­னணு கரன்­சி­களில், முத­லீடு செய்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

வலை­த­ளங்­களில், இவ்­வகை கரன்­சி­கள் மீதான, வர்த்­த­கப் பரி­வர்த்­த­னை­களும் நடக்­கின்றன. மேலும், மெய்­நி­கர் கரன்­சி­க­ளுக்கு என, தனியே, ‘இ – வாலட்’ எனப்­படும், மின்­னணு பணப் பை நிறு­வ­னங்­களும் செயல்­ப­டு­கின்றன. இந்த, மின்­னணு பணப் பைகளில் சேமிக்­கப்­படும் மெய்­நி­கர் கரன்­சி­கள், வர்த்­த­கப் பரி­மாற்­றங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்றன.

‘இந்த கரன்­சி­களில் செய்­யும் முத­லீ­டு­கள், பரி­வர்த்­த­னை­கள் ஆகி­யவை ஆபத்­தா­னவை; எத்­த­கைய இடர்ப்­பாடு ஏற்­பட்­டா­லும், அது, இத்­த­கைய கரன்சி வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­வோ­ரையே சாரும்’ என, ரிசர்வ் வங்கி, ஏற்­க­னவே எச்­ச­ரித்­துள்­ளது. இத்­த­கைய மெய்­நி­கர் கரன்­சி­கள், சட்ட விரோத பணப் பரி­மாற்­றத்­திற்­கும், பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்­கும் பயன்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டும் உள்­ளது.

இழப்பு:
இந்­நி­லை­யில், சமூக வலை­த­ளம் ஒன்று, தக­வ­ல­றி­யும் உரிமை சட்­டத்­தில், ரிசர்வ் வங்­கி­யி­டம், சில விப­ரங்­களை கோரி இருந்­தது. அதில், ‘இந்­தி­யா­வில், மெய்­நி­கர் கரன்சி பரி­வர்த்­த­னைக்கு, அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளதா? இல்­லை­யென்­றால், இத்­த­கைய கரன்­சி­கள் மூலம், முறை­கே­டாக வர்த்­த­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­கள் மீது, என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது?’ என்­பது உள்­ளிட்ட கேள்­வி­கள் இடம் பெற்­றி­ருந்­தன.

அதற்கு, ரிசர்வ் வங்கி அளித்­துள்ள பதில்: இந்­தி­யா­வில், ‘பிட்­காய்ன், எரித்­தி­ரியா’ உள்­ளிட்ட, எந்­த­வொரு மெய்­நி­கர் கரன்­சி­க­ளை­யும், வலை­த­ளங்­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு, அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. இந்த கரன்­சி­கள் மூலம், சட்ட விரோத வர்த்­த­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­கள் குறித்த விப­ரங்­கள் எது­வும் தெரி­யாது. இந்த மெய்­நி­கர் கரன்­சி­களில் முத­லீடு செய்­வோர், கரன்சி மீதான வர்த்­த­கம் நடை­பெ­றும் சந்­தை­கள் குறித்த தக­வ­லும், வங்­கி­யி­டம் இல்லை.

இந்த மெய்­நி­கர் கரன்­சி­களை வைத்­தி­ருப்­போர், பயன்­ப­டுத்­து­வோர், முத­லீடு செய்­வோர் அல்­லது வர்த்­த­கம் புரி­வோர், அவ­ர­வர் சொந்த பொறுப்­பி­லேயே செய்­வ­தாக கரு­தப்­படும். இந்த மெய்­நி­கர் கரன்­சி­கள், ஊக மதிப்பு கொண்­டவை. இந்த கரன்­சி­களை பயன்­ப­டுத்­து­வோர், பெரும் இழப்பை சந்­திக்க வாய்ப்­பு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)