பதிவு செய்த நாள்
03 நவ2017
00:01
நாமக்கல் : கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தேங்காய் உற்பத்தி, 80 சதவீதம் சரிந்துள்ளது. அதனால், விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், பொள்ளாச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, நாமக்கல், கரூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில், தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தேங்காய், மும்பை, மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு, தினமும் அனுப்பப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது உற்பத்தி சரிந்துள்ளதால், வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் தேங்காய் லோடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில், தேங்காய் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, ஐந்து ரூபாய்க்கு விற்ற ஒரு நடுத்தர ரக தேங்காய், தற்போது, 17 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இது குறித்து, தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க இணை செயலர், ஏ.ஜெகநாதன் கூறியதாவது:தேங்காய் உற்பத்தி, 80 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. மேலும், 15 சதவீதம் மரங்கள் பட்டுப்போனது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தினசரி, 300 லோடு தேங்காய் சென்ற நிலையில், தற்போது, 50 – 60 லோடு மட்டுமே அனுப்பப்படுகிறது. இந்த சரிவு, விவசாயிகளை மட்டுமின்றி, வியாபாரிகளையும் பாதிப்படைய செய்துள்ளது. தற்போது, பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், தென்னை மரங்களில், குருத்து பிடிக்க துவங்கி உள்ளது. வரும் ஆறு மாதங்களில், இந்நிலை சீராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|