பதிவு செய்த நாள்
05 நவ2017
06:32
மாருதி சுசூகி நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல், ‘வாரன்டி’ சலுகையை அறிவித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் கார்களை வாங்குவோருக்கு வழக்கமாக, இரு ஆண்டுகள் அல்லது 40 ஆயிரம் கி.மீ., ஆகியவற்றில், எது முதலில் வருகிறதோ, அதுவரை வாரன்டி வழங்கப்படும்.இந்நிலையில் தற்போது, இரு ஆண்டுகள் வாரன்டி முடிந்தவர்களுக்கு, அதை மேலும் நீட்டிக்கும் சலுகையை, அந்நிறுவனம் வழங்கி உள்ளது. அதன்படி, மூன்றாம் ஆண்டுக்கு மட்டும் அல்லது 60 ஆயிரம் கி.மீ.; 3 மற்றும் 4வது ஆண்டு அல்லது 80 ஆயிரம் கி.மீ.; 3, 4 மற்றும் 5ம் ஆண்டுகள் வரை அல்லது ஒரு லட்சம் கி.மீ., வரை என, மூன்று சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இது, அதன் பிரீமியம் ரக கார்களை விற்கும், ‘நெக்ஸா’ ஷோ ரூம்களில் விற்கப்படும் வாகனங்களுக்கும் பொருந்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|