பதிவு செய்த நாள்
12 நவ2017
03:19
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மெர்சிடெஸ் பென்ஸ்’ அதன், ஏ.எம்.ஜி., வரிசை கார்களில், சி.எல்.ஏ., 45 மற்றும், ஜி.எல்.ஏ., 45 மேட்டிக் ஆகிய புதிய மாடல்களை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களில், 2.0 நான்கு சிலிண்டர் உடைய, 1991 ‘சிசி’ இன்ஜின், உலகில் அத்தகைய தொழில்நுட்பம், திறத்தில் தயாராகும் வேறு எந்த இன்ஜினையும் விட சக்தி மிக்கது என, அந்நிறுவனம் கூறியுள்ளது. இவை இரண்டும், புறப்பட்ட, 4.2 வினாடிகளில், 250 கி.மீ., வேகத்தை எட்டி பிடிக்கக் கூடியவை.ஏ.எம்.ஜி., வரிசை கார்களை அறிமுகம் செய்து, 50 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், இந்த கார்களை, பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.இது குறித்து, ‘மெர்சிடெஸ் பென்ஸ் இந்தியா’ நிர்வாக இயக்குனர், ரோலண்ட் போல்ஜர் கூறுகையில், ‘‘அதிக திறனுடைய கார்கள் மீதான ஆர்வம், இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதனால், அத்தகைய கார்களில், புதுமையை புகுத்துவது அவசியமாகிவிட்டது.‘‘இப்பிரிவில், இந்தியாவில், நாங்கள் தான் முன்னிலை வகிக்கிறோம். தரமான வாகனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து, முதலிடத்தை தக்க வைப்போம்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|