பதிவு செய்த நாள்
17 நவ2017
00:12
சிங்கப்பூர் : ‘இந்திய பொருளாதாரம், தற்காலிக மந்த நிலையில் இருந்து விடுபட்டு, எழுச்சியை நோக்கி நடைபோட துவங்கி உள்ளது,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூரில், முதலீட்டாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது: மத்திய அரசு, நாட்டின் அடித்தள கட்டமைப்பை வலுமிக்கதாக மாற்ற, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், தற்காலிக இடர்ப்பாடு ஏற்பட்டது. இந்த பாதிப்பு, முடிவுக்கு வந்துள்ளதாக கருதுகிறேன். இனி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும். சர்வதேச பொருளாதாரமும், முன்னேறி வருகிறது.
நம் அடிப்படை கட்டமைப்பு வலுவாக உள்ளது. மூன்று ஆண்டுகளாக, நாம், 7 – 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வந்து உள்ளோம். சிறிய, நடுத்தர நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன. இத்தகைய நிறுவனங்களுக்கு, அதிக அளவில் முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதற்கு, வங்கிகளுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, மறு பங்கு முதலீட்டு திட்டம் உதவி புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|