பதிவு செய்த நாள்
17 நவ2017
23:59
புதுடில்லி : ‘‘இந்தியா, அடுத்த, 20 ஆண்டுகளில், 7 சதவீத சராசரி வளர்ச்சி காணும்பட்சத்தில், அதுவும், சமச்சீரான வளர்ச்சியாக இருந்தால், அது குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும்,’’ என, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர், பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மேலும் பேசியதாவது: இந்தியா, வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது. அதற்கான படிக்கல்லாக, ஜி.எஸ்.டி., அறிமுகமும், இதர வரி சீர்திருத்தங்களும் அமைந்துள்ளன. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வரி வருவாய் விகிதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அரசின் வருவாய் பெருகி, கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கிய பராமரிப்பு ஆகியவற்றுக்கு, அதிக நிதி ஒதுக்க முடியும்.
அமெரிக்க பொருளாதாரத்தில், சமூகநலத் தொண்டுகளுக்கான ஒதுக்கீடு, 2 சதவீதமாக உள்ளது. இது, இந்தியாவில், 0.2 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. அடுத்த, 20 ஆண்டுகளில், இந்தியாவின் சராசரி வளர்ச்சி, 7 சதவீதமாக, அதுவும், சமச்சீர் வளர்ச்சியாக இருந்தால், அது, உள்நாட்டிற்கு மட்டுமின்றி, உலகிற்கே அதிசயமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|