பதிவு செய்த நாள்
20 நவ2017
03:52
தேசிய பங்குச் சந்தை குறியீடான, ‘நிப்டி’ கடந்த வார துவக்கத்தில் சரிவை சந்தித்தாலும்,வார இறுதி நாட்களில் உயர்ந்து வியாபாரமாகியது. நவ., 6ல், சந்தை வரலாற்று உச்சமான, 10,490 புள்ளிகளை தொட்டது. அதன்பின், தொடர்ச்சியாக, 394 புள்ளிகள் குறைந்து, 10,094 புள்ளிகளை அடைந்தது.சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ இந்தியாவின் கடன் மதிப்பு தரத்தை, 2004க்கு பின், கடந்த வாரம் அதிகரித்தது. இதையடுத்து, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களுக்கு, இது ஒரு வாய்ப்பாக அமையும் என, கருதப்பட்டது. இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கிகளில், எளிதில் கடன் பெற உதவியாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தால், சந்தையில் பங்குகள் விலை அதிகரித்தது.இது, வரும் நாட்களில், சந்தைக்கு சாதகமான போக்கை உருவாக்கும். இதன்படி, பங்குகள் விலை உயர்ந்து காணப்படும்.நவ., 30ல், உள்நாட்டு மொத்த உற்பத்தி புள்ளி விபரம் மற்றும், ‘ஒபெக்’ நாடுகளின் உற்பத்தி குறைப்பு நீட்டிப்பு கூட்ட முடிவுகள் ஆகியவை, வெளி வர உள்ளன.அமெரிக்க வட்டி விகிதம் குறித்த கூட்டம், டிச., 12, 13ல் நடைபெற உள்ளது. டிச., 18ல், குஜராத் தேர்தல் முடிவுகள் வரும். வரும் நாட்களில், இவற்றின் தாக்கம் சந்தையில் எதிரொலிக்கும்.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள், தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகின்றன. அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள வரி விகித சீர்திருத்தம், ‘செனட்’ சபையில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. மேலும், இனி இருமுறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிதியாண்டின், இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டு முடிவுகளில், ஜி.எஸ்.டி.,யின் தாக்கத்தை, சிறிதளவு உணர முடியும்.‘நிப்டி’ ஏழு நாட்களுக்கு பின், வார இறுதியில், சரிவில் இருந்து உயர்ந்தது. அடுத்த ரெசிஸ்டென்ட், 10,460 மற்றும் 10,590 ஆகும். சப்போர்ட், 10,240 மற்றும் 10,090 ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|