பதிவு செய்த நாள்
06 டிச2017
00:28
புதுடில்லி;சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனம், ஏ.டி.எம்., சேவைகள், பணம் வினியோகம் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, 'செபி'யிடம் விண்ணப்பித்து இருந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த, 'செபி,' சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,000 - 1,200 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு பணிகளை, கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், யு.பி.எஸ்., செக்யூரிட்டிஸ் ஆகியவை நிர்வகிக்க உள்ளன.இதையடுத்து, விரைவில் பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு வெளியீடு முடிந்த பின், இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதைத் தொடர்ந்து, பங்குகள் மீது வர்த்தகம் துவங்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|