பதிவு செய்த நாள்
07 டிச2017
00:03
புதுடில்லி:மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லியை, நேற்று சந்தித்த தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை குறைக்க வேண்டும்; ஏற்றுமதி வருவாய்க்கு, வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வரும், 2018 -– 19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், 2018 பிப்., 1ல் தாக்கல் செய்யப்படும் என, தெரிகிறது.இதையொட்டி, நேற்று டில்லியில் நடைபெற்ற, பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், தொழில் துறை பிரதிநிதிகள், அருண் ஜெட்லியை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பங்கஜ் படேல், தலைவர், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு: ‘கார்ப்பரேட் நிறுவன வரி, 30ல் இருந்து, 25 சதவீதமாக குறைக்கப்படும்’ என, இரு ஆண்டுகளுக்கு முன், அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். அதன்படி, வரும் பட்ஜெட்டில், வரியை, 18 – -25 சதவீதமாக குறைக்க வலியுறுத்தினோம்.
புதிய கண்டுபிடிப்பு
களுக்கு, அரசு ஆதரவளிக்க கேட்டுக் கொண்டோம். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மற்றும், ‘ஸ்டார்ட் அப்’ துறையில், அதிக முதலீடுகளை ஈர்த்தால், வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பிட்ட துறைகளில், புதிய முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கலாம். வரிகள் அல்லது கட்டுப்பாடுகள் அற்ற, தயாரிப்பு வசதி உள்ள ஏற்றுமதி மண்டலங்களை அமைக்க வேண்டும் என, கூறியுள்ளோம்.
ஷோபனா காமினேனி, தலைவர், இந்திய தொழிலக கூட்டமைப்பு: உலகளவில், கார்ப்பரேட் நிறுவன வரி, இந்தியாவை விட குறைவாகவே உள்ளது. எனவே, அவ்வரியை, 18 சதவீதமாக குறைக்க வேண்டும். அத்துடன், வரி விலக்கு மற்றும் வரிச்சலுகைகள், கூடுதல் வரி, ஆயத்தீர்வு ஆகியவற்றையும் திரும்பப் பெற வலியுறுத்தி உள்ளோம்.
தனியார் முதலீடுகளை ஈர்க்க, தேவை மற்றும் திறனை அதிகரிக்க வேண்டியது அவசியம். அதற்கான திட்டங்கள் குறித்து, ஆலோசனை வழங்கினோம்.பி.கே.ஷா, முன்னாள் தலைவர், இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு: அமெரிக்காவில், ஏற்றுமதி வாயிலான வருவாய்க்கு, தனி வரி விகிதம் உள்ளது. அதனால், கார்ப்பரேட் வரி விகிதத்தை விட, குறைவான வரியை, ஏற்றுமதியை சார்ந்துள்ள நிறுவனங்களுக்கு விதிக்க வேண்டும் என, தெரிவித்தோம்.
சந்தீப் ஜஜோடியா, தலைவர், ‘அசோசெம்’ அமைப்பு:
வளர்ந்த நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கார்ப்பரேட் வரி குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவும், அதை பின்பற்றி, வரியை குறைக்க வேண்டும். மேலும் தற்போது, 20 சதவீதமாக உள்ள, டிவிடெண்டு வினியோக வரியையும் குறைக்க வேண்டும்.
அகீல் அகமது, துணைத் தலைவர், தோல் ஏற்றுமதி கூட்டமைப்பு: நேரடி வரிகளை குறைக்கவும், மகளிர் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவும், கோரிக்கை விடுத்துள்ளோம். ஜி.எஸ்.டி.,யில் செலுத்திய வரியை, விரைவாக திரும்ப பெற, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|