‘இ ----– மெயில்’ மோசடி எச்சரிக்கை தேவை ‘இ ----– மெயில்’ மோசடி எச்சரிக்கை தேவை ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.39 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.39 ...
செயல்­திறன் மேம்­பட உதவும் 3 வழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2017
00:38

செயல்­திறன் மற்றும் உற்­பத்தி திறனை மேம்­ப­டுத்திக் கொள்ள, மூன்று முக்­கிய பழக்­கங்கள்
அவ­சியம் என்­கிறார், ‘ஹை பர்­பார்மன்ஸ் ஹாபிட்ஸ்’ புத்­த­கத்தின் ஆசி­ரி­ய­ரான, பெர்­னார்டு பர்­கர்டு.

அதிக செயல் திறன் கொண்­ட­வர்கள், எந்த சூழ­லிலும் விரும்­பிய உணர்­வு­களை உரு­வாக்கி கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர். அன்­றைய தினத்தின் மன­நி­லையை சுமந்து திரிய வேண்­டிய அவ­சியம் இல்லை என்­ப­தையும், அவர்கள் அறிந்­தி­ருக்­கின்­றனர். ஆற அமர உட்­கார்ந்து, மன­நி­லையை மாற்ற வேண்­டிய அவ­சி­யத்தை, அவர்கள் உணர்­வ­தில்லை.
செயல்­திறன் மிக்­க­வர்கள், தங்­களை வந்­த­டையும் மன­நி­லையை விட, விரும்­பிய மன­நி­லையை உரு­வாக்கி கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.

ஒரு சூழலில் இருந்து இன்­னொரு சூழ­லுக்கு மாறும் போது, கண்­களை மூடி, மன அழுத்­தத்தை மெல்ல விடு­விக்­கவும். இது உங்­க­ளுக்கு விருப்­ப­மான உணர்வை பெற உதவும்.
அவ­சி­ய­மா­ன­வர்­க­ளாக உணர்­வது எத்­தனை ஆற்றல் அளிக்கக் கூடி­யது என்­பதை, செயல்­திறன் மிக்­க­வர்கள் அறிந்­துள்­ளனர்.

செயல்­திறன் மிக்­க­வர்கள் சிறப்­பாக செயல்­படும் வாய்ப்பை எதிர்­பார்ப்­ப­தில்லை. சிறப்­பாக செயல்­படும் கட்­டா­யத்தைஏற்­ப­டுத்தும் சூழலை உரு­வாக்கி கொள்­கின்­றனர். உங்கள் இலக்­குகள் என்­னவோ அதற்­கேற்ற அடை­யா­ளத்தை உரு­வாக்கி கொள்­ளவும். பணி­யாற்­று­வ­தற்­கான உற்­சாகம் பெறும் போது, இது தான் நான், இப்­படி தான் இருப்பேன் என, சொல்லிக் கொள்­ளுங்கள்.

பல­ருக்கு உதவி செய்­வ­தை­விட, ஒருவர் மீது கவனம் செலுத்­துங்கள். உங்கள் நோக்கம் மற்றும் பணி­க­ளுக்கு அர்த்தம் அளிக்கக் கூடிய ஒரு­வரை கண்­டு­பி­டி­யுங்கள். இதை
கண்­ட­றிய, என்­னு­டைய செயல்­பாடு யாருக்கு தேவை என, கேட்டுக் கொள்­ளுங்கள்.
இதன் மூலம் தனிப்­பட்ட செயல்­பா­டு­களை கடந்து, மற்­ற­வர்­க­ளுடன் அர்த்­த­முள்ள வகையில் தொடர்பு கொள்­வ­தற்­கான வாய்ப்பு உண்­டாகும்.

துடிப்­புடன் செயல்­ப­டு­வ­தற்கு, தகு­தி­யுள்ள ஒரு­வரை கண்­ட­றிய இது ஊக்­க­மாக அமையும். மற்­ற­வர்­க­ளுக்கு உங்கள் சிறந்த செயல்­பாட்டை வெளிப்­ப­டுத்த, இது நிர்ப்­பந்­தித்து உங்கள் தனிப்­பட்ட செயல்­தி­றனை அதி­க­ரிக்கும்.நீங்கள் உதவ விரும்பும் நபரை தேடும் போது, அந்த நபர் குடும்ப உறுப்­பி­ன­ராக இருக்­கலாம்,

அலு­வ­லக ஊழி­ய­ராக இருக்­கலாம்; நண்­ப­ராக இருக்­கலாம். யாராக இருந்­தாலும், அவர்கள் முகத்தை கண் முன் கொண்டு வந்துப் பாருங்கள். பணியில் சுமையை உணர்ந்­தாலோ அல்­லது கவனம் செலுத்த முடி­யாமல் அவ­திப்­பட்­டாலோ, யாருக்கு என் திறன் தேவை எனும் கேள்­வியை கேட்டுக் கொள்­ளுங்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)