பதிவு செய்த நாள்
12 டிச2017
00:55
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, எஸ்.பி.ஐ., ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைத்து கொண்டதை அடுத்து, 1,300 கிளைகளின், ஐ.எப்.எஸ்.சி.,குறியீடுகளை மாற்றி உள்ளது.
ஒரு வங்கியின் பெயர், கிளை, நகரம் உள்ளிட்ட விபரங்களை கொண்ட, 11 இலக்க, ஐ.எப்.எஸ்.சி., குறியீடு, மின்னணு முறையில், சுலபமாக பணப் பரிமாற்றம் செய்ய உதவுகிறது.எஸ்.பி.ஐ., ஏப்ரலில், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் மற்றும் பாரதிய மகிளா வங்கியை, தன்னுடன் இணைத்துக் கொண்டது.அவ்வங்கிகளின் வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர். இதையடுத்து, வங்கி கிளைகளுக்கான, ஐ.எப்.எஸ்.சி., குறியீடும் மாறியுள்ளது.
‘‘இணைப்பிற்கு பின், வங்கி கிளைகளின், பழைய மற்றும் புதிய பெயர்களும், மாற்றப்பட்ட, ஐ.எப்.எஸ்.சி., குறியீடு குறித்த விபரங்களும், வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், இந்த விபரங்கள், எஸ்.பி.ஐ., வலைதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளன.‘‘பழைய குறியீட்டை குறிப்பிட்டாலும், தானாகவே, புதிய குறியீட்டின் கீழ் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியும் உள்ளது,’’ என, எஸ்.பி.ஐ., சில்லரை மற்றும் டிஜிட்டல் பிரிவின் நிர்வாக இயக்குனர், பிரவீன் குப்தா தெரிவித்து உள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|