பதிவு செய்த நாள்
14 டிச2017
00:04
பெங்களூரு:வருமான வரித் துறையினர், நாட்டில் உள்ள முக்கிய, ‘பிட்காய்ன்’ பரிவர்த்தனை நிறுவனங்களில், நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வலைதளங்களில் புழங்கும் மெய்நிகர் கரன்சியான பிட்காய்ன் பரிவர்த்தனைக்கு, இந்தியாவில் தடை ஏதும் இல்லை என்ற போதிலும், முதலீட்டிற்கு ஆபத்து என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.பிட்காய்ன், சட்ட விரோத பணப் பரிமாற்றம், போதை மருந்து, பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, நாடு தழுவிய அளவில், பிட்காய்ன் பரிவர்த்தனை நிறுவனங்களில், வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, அந்நிறுவனங்களின் வாடிக்கையாளர் விபரங்கள், அவர்களின் வங்கிக் கணக்கு, பணப் பரிமாற்றம், பிட்காய்ன் பரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பிட்காய்ன் பரிவர்த்தனைகளில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என்பதை ஆராயவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக, வருமான வரி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவில், ‘யுனோ காய்ன், ஸெப்பே’ உட்பட, 10 நிறுவனங்கள், பிட்காய்ன் பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|