பதிவு செய்த நாள்
14 டிச2017
00:05
மும்பை:பொதுத் துறை வங்கிகள், வாராக் கடன் தொடர்பாக, மேலும், 23 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்க உள்ளன.வங்கித் துறையில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, வாராக் கடன் மற்றும் இடர்ப்பாட்டுக் கடன் உள்ளது.இத்தொகையில்,
12 நிறுவனங்களிடம் இருந்து மட்டும், 2.50 லட்சம் கோடி ரூபாய்
வசூலிக்க வேண்டியுள்ளது. இதில், 11 நிறுவனங்கள் மீது திவால்
நடவடிக்கை எடுக்க, தேசிய நிறுவனங்கள் சட்ட வாரியத்திடம், வங்கிகள் விண்ணப்பித்துள்ளன.ஆகஸ்டில்,
ரிசர்வ் வங்கி, மேலும், 28 நிறுவனங்களிடம் இருந்து, 1.60 லட்சம்
கோடி ரூபாய் வாராக் கடனை வசூலிக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
நேற்றுடன்,
இதற்கான கெடு முடிவடைந்தது. இதில், அன்ரக் அலுமினியம், ஜெயஸ்வால்
நிகோ இண்டஸ்ட்ரீஸ், சோமா எண்டர்பிரைசஸ், ஜே.பி.அசோசியேட்ஸ் உட்பட
சில நிறுவனங்கள், கடனை திரும்ப செலுத்த முன்வந்துள்ளன.எஞ்சிய, 23 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை பாயும் என, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|