பதிவு செய்த நாள்
19 டிச2017
23:41
புதுடில்லி : இளைஞர்களுக்கு தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க, மாருதி சுசூகி நிறுவனம் – மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சகம் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொது பயிற்சி இயக்ககத்துடன், மாருதி நிறுவனம் இணைந்து, திறன் பயிற்சி திட்டங்களை செயல்படுத்தும். இதன்படி, இளைஞர்களுக்கு வாகன துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதில் பங்கேற்கும், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, மாருதி நிறுவனத்திலோ அல்லது அதன் கூட்டணி நிறுவனத்திலோ வேலைவாய்ப்பு வழங்கப்படும்.மேலும், தகுதியுள்ள இளைஞர்களின் உயர் கல்விக்கும், அவர்கள் தொழில் முனைவோராக உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாருதி கூறியுள்ளது.
இது தவிர, மாருதி நிறுவனம், தொழில்நுட்ப பயிற்சி மையங்கள், பிராந்திய பயிற்சி மையங்கள், கூட்டு நிறுவனங்கள் வாயிலாக, மாணவர்களுக்கு திறன் பயற்சி அளிக்க உள்ளது. இதில் பங்கேற்க, 15ம் தேதி நிலவரப்படி, 1,680 மாணவ – மாணவியர் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை, 2018 – 19ம் நிதியாண்டுக்குள், 2,400 ஆக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|