பதிவு செய்த நாள்
20 டிச2017
23:51
மும்பை : ‘‘பிட்காயின் எனப்படும், மெய்நிகர் நாணயத்தை, அவ்வளவு எளிதாக ஒதுக்கி தள்ளி விட முடியாது,’’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தலைவர், அஜய் தியாகி தெரிவித்து உள்ளார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., ஏற்பாடு செய்திருந்த, நிதி சந்தை மாநாட்டில் பங்கேற்று பேசிய, அஜய் தியாகி கூறியதாவது: தற்போது வரை, ‘பிட்காயின்’ போன்ற மெய்நிகர் நாணயங்கள், ரிசர்வ் வங்கியாலோ அல்லது வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் அரசு, ‘பிட்காயின்’ குறித்து, ரிசர்வ் வங்கி மற்றும், ‘செபி’யுடன் கலந்தாலோசித்து வருகிறது. இதற்கான குழுவில், ரிசர்வ் வங்கி, ‘செபி’ தவிர, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்துள்ளது. இந்த குழு, ‘பிட்காயின்’ குறித்து என்ன செய்வது என்பது பற்றி ஆய்வு செய்கிறது.
இருப்பினும், ‘பிளாக் செயின்’ எனும், தொழில்நுட்பம் குறித்த எந்தவிதமான ஒழுங்குமுறை ஏற்பாடுகளிலும் இறங்கவில்லை. அந்த தொழில்நுட்பத்தை ஒவ்வொருவரும் பயன்படுத்துகின்றனர். அது, மிகவும் உபயோகமான ஒன்றாகும். அதை, நாம் ஆதரிக்க வேண்டும். பிளாக் செயினை, நாம் கண்காணித்து, ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிட்காயினும், பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|