பதிவு செய்த நாள்
22 டிச2017
10:00
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (டிச.,22) இந்தி பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. நேற்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த போதிலும், பெரும்பாலான நிறுவன பங்குகள் உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன.
டிசிஎஸ் நிறுவனம், அமெரிக்காவின் நில்சன் நிறுவனத்துடன் 2020 ம் ஆண்டு வரை 2.25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை அமைத்துள்ளது. இதன் காரணமாக இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 73.79 புள்ளிகள் உயர்ந்து 33,830.07 புள்ளிகளாகவும், நிப்டி 21.50 புள்ளிகள் உயர்ந்து 10,461.80 புள்ளிகளாகவும் உள்ளது.
எல் அண்ட் டி, எய்சர் மோட்டார்ஸ், எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், பிபிசிஎல், பஜாஜ் ஆட்டோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ், பார்தி இன்போடெல், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|