தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு ... ரூ.1249 விலையில் 4ஜி மொபைல்போன் அறிமுகம்: ஏர்டெல் அதிரடி ரூ.1249 விலையில் 4ஜி மொபைல்போன் அறிமுகம்: ஏர்டெல் அதிரடி ...
16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2017
15:59

புதுடில்லி: இந்தியாவில் அழகிய செல்ஃபி எடுக்க ஏதுவாக புதிய ஸ்மார்ட்போனினை ஜியோணி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் தலைசிறந்த செல்ஃபி கேமரா மற்றும் நீண்ட நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் அறிமுகமான ஜியோணி எஸ்10 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஜியோணி எஸ்10 லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருப்பதோடு, புகைப்படங்களின் அழகை கூட்ட பல்வேறு புதிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குளோன் போன்ற அம்சம் வழங்கப்பட்டிருப்பதால், புதிய ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும். இத்துடன் அதிநவீன கண் பாதுகாப்பு அம்சம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு அடிக்கடி கண் சோர்வு ஏற்படுவதை தவிர்க்கும் என ஜியோணி தெரிவித்துள்ளது.
ஜியோணி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1280x720 பிக்சல்- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்- 4 ஜிபி ரேம்- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்- 3100 எம்ஏஎச் பேட்டரி- கைரேகை ஸ்கேனர்
அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள மென்பொருள் மற்றும் வன்பொருள் அம்சங்கள் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு, சீராக பயன்படுத்த வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மின்னல் வேகக்தில் இயங்கும் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 23-ம் தேதி முதல் துவங்குகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)