பதிவு செய்த நாள்
26 டிச2017
00:28
புதுடில்லி : ‘வரி குறைப்பு, மானியம் உள்ளிட்ட சலுகைகள் மூலம், மின் வாகனங்களின் விற்பனையை உயர்த்தலாம்’ என, வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘சியாம்’ மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கை வழங்கி உள்ளது.
அதன் விபரம்: மத்திய அரசு, 2030ல், பொது போக்குவரத்தில், 100 சதவீத மின் வாகனங்களை இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நோக்கம் நிறைவேற, குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில், நிதி மற்றும் நிதி சாரா ஊக்கச்சலுகைகளை வழங்க வேண்டும். மின் வாகனங்களுக்கு நியாயமான விலை; ‘சார்ஜ்’ செய்யும் கட்டமைப்பு வசதிகள் தேவை. மின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். நுகர்வோரிடம், மின் வாகனங்களால் கிடைக்கும் சுற்றுச்சூழல் பயன்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மின் வாகன பயன்பாட்டை முடுக்கி விட, ரொக்க மானியம் வழங்கலாம்; ஜி.எஸ்.டி.,யை குறைக்கலாம்; வருமான வரி விலக்கு சலுகை அளிக்கலாம். வங்கிகள், முன்னுரிமை துறைகளுக்கு அளிப்பது போல், குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம். இருசக்கர மின் வாகனங்களை, வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்கலாம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம், 2047ல், இந்தியா முழுவதும், மின் வாகனங்களாக மாறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய பரிந்துரைகள்:
* ஜி.எஸ்.டி.,யை, 12லிருந்து, 5 சதவீதமாக குறைக்கலாம்
* முழு தொகை செலுத்தி மின் வாகனம் வாங்கினால், வருமான வரியில், 30 சதவீதம் விலக்கு அளிக்கலாம்
* சாலை வரியில் இருந்து முழு விலக்கு வழங்கலாம்
* வங்கி கடனில் மின் வாகனம் வாங்குவோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை வட்டித் தொகைக்கு, வருமான வரி விலக்கு அளிக்கலாம்
* வீடுகளை விட, 50 சதவீதம் குறைவாக, மின் வாகன, ‘சார்ஜ்’ கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|