பதிவு செய்த நாள்
26 டிச2017
00:29
புதுடில்லி : நடப்பு டிசம்பரில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, 7,300 கோடி ரூபாய் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன.
இந்நிறுவனங்கள், எட்டு மாதங்களில் இல்லாத வகையில், நவம்பரில், 19,728 கோடி ரூபாய்க்கு பங்கு முதலீடு மேற்கொண்டன. இதற்கு, பொதுத் துறை வங்கிகளில், 2.11 லட்சம் கோடி ரூபாய் மறு பங்கு மூலதனம் மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசின் அறிவிப்பு வெளியானது முக்கிய காரணம். மேலும், உலக வங்கி, சுலபமாக தொழில் புரியும் நாடுகளில், இந்தியாவை வெகுவாக உயர்த்தியதும், முதலீடு உயர துணை புரிந்தது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையேற்றம், நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு உயர்வு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டிய விடுமுறை காலம் போன்றவற்றால், லாபமீட்டும் நோக்கில், இம்மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக பங்குகளை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தாண்டு, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில், 49,836 கோடி ரூபாய்; கடன் பத்திரங்களில், 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|