தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... ரூ.93க்கு தினமும் 1 ஜிபி டேட்டா : ஏர்டெல் அடுத்த அதிரடி ரூ.93க்கு தினமும் 1 ஜிபி டேட்டா : ஏர்டெல் அடுத்த அதிரடி ...
விரைவில் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2017
15:57

புதுடில்லி: சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா 3310 மொபைல் போன் 2ஜி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய வடிவமைப்பு கொண்ட நோக்கியா 3310 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 மொபைல் போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 4ஜி திறன் கொண்ட நோக்கியா 3310 டிஏ-1077 மொபைல் போன் சீன வலைத்தளத்தில் கசிந்துள்ளது. நோக்கியா 3310 4ஜி மாடல் யுன் ஓ.எஸ். கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பதிப்பு ஆகும்.
நோக்கியா 3310 2ஜி மொபைல் போனில் நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளமும் 3ஜி பதிப்பு ஜாவாவின் பீச்சர் ஓ.எஸ். வழங்கப்பட்ட நிலையில் புதிய எல்டிஇ பதிப்பு யுன் ஓ.எஸ். கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. முந்தைய மாடல்களை விட புதிய மொபைல் போன் சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் அதிக இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது. அந்த வகையில் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 மாடலில் 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் லைட், ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், டூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மாடலில் பேட்டரி நீட்டிப்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் புதிய மொபைல் போன் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மொபைல் போனுடன் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)