பதிவு செய்த நாள்
09 ஜன2018
01:11
ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க திட்டமிட்டு உள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம், பங்குத்தரகு சேவை, முதலீட்டு வங்கி சேவை, சொத்து மேலாண்மை சேவை உள்ளிட்டவற்றில் ஈடுபடுகிறது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு மேற்கொண்டு, 3,200 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, 'செபி' அனுமதியை தொடர்ந்து, பிப்ரவரியில், இவ்வெளியீடு இருக்கும் என, தெரிகிறது.
பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச், சிட்டி குரூப், சிட்டிக் சி.எல்.எஸ்.ஏ., எடல்வைஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் ஆகியவை, இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளன.இவ்வெளியீட்டில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 6.40 கோடி பங்குகளை விற்பனை செய்யும் என, தெரிகிறது. ஏற்கனவே இவ்வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|