கமாடிட்டி சந்தையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்?கமாடிட்டி சந்தையில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்? ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.66 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.66 ...
அனைத்து துறைகளுக்கும் அரசு அனுமதி:ஒப்பந்த தொழிலாளர்களை நேரடியாக நிறுவனங்களே நியமித்து கொள்ளலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
04:23

புதுடில்லி:அனைத்து துறை நிறு­வ­னங்­களும், நிரந்­தர ஊழி­ய­ருக்கு நிக­ரான ஊதி­யத்­து­டன், ஒப்­பந்த தொழி­லா­ளரை நிய­மிக்க அனு­மதி அளித்து, மத்­திய அரசு வரைவு அறிக்கை வெளி­யிட்டு உள்­ளது.இத­னால், நிறு­வ­னங்­கள், ஒப்­பந்­த­தா­ரர் தய­வின்றி, தொழி­லா­ளர்­களை நேர­டி­யாக தற்­கா­லிக பணி­களில் நிய­மிக்க முடி­யும்.
அனுமதி
தற்­போது, ஆயத்த ஆடை­கள் தயா­ரிப்­புத் துறை­யில் மட்­டுமே, குறிப்­பிட்ட கால ஒப்­பந்த பணி­யா­ளர் நடை­மு­றைக்கு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது. இதை, அனைத்து துறை­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்த வேண்­டும் என, பல ஆண்­டு­க­ளாக, தொழில் கூட்­ட­மைப்­பு­கள் கோரின.சமீ­பத்­தில் நடந்த மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு கூட்­டத்­தில், காலணி, தோல் மற்­றும் தோல் பொருட்­கள் உள்­ளிட்ட துறை­க­ளுக்­கும், ஒப்­பந்த பணி­யா­ளர் நடை­மு­றையை விரி­வு­ப­டுத்­து­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது.
இந்­நி­லை­யில், அனைத்து துறை­க­ளி­லும், ஒப்­பந்த பணி­யா­ளர் நடை­மு­றைக்கு, மத்­திய தொழி­லா­ளர் மற்­றும் வேலை­வாய்ப்பு அமைச்­ச­கம் அனு­மதி அளித்­துள்­ளது.இந்த முடிவு, மிகப்­பெ­ரிய அள­வில், சர்­வ­தேச முத­லீ­டு­களை ஈர்க்க துணை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இது குறித்து, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­பின், தொழில் நல்­லு­ற­வுக்­கான தேசிய குழு தலை­வர், எம்.எஸ்.உன்­னி­கி­ருஷ்­ணன் கூறி­ய­தா­வது:தற்­போது நிறு­வ­னங்­கள், ஒப்­பந்­த­தா­ரர் மூல­மா­கவே, தற்­கா­லிக பணிக்­கான தொழி­லா­ளர்­களை நிய­மிக்­கின்றன. நிறு­வ­னம், ஒப்­பந்த தொழி­லா­ள­ருக்கு நிர்­ண­யிக்­கும் ஊதி­யத்­தில், ஒரு பகு­தியை, ஒப்­பந்­த­தா­ரர், தனக்­கு­ரிய கட்­ட­ண­மாக எடுத்­துக் கொள்­கி­றார்.
முரண்பாடு
அத­னால், ஒப்­பந்த தொழி­லா­ள­ருக்கு, ஊதி­யம் குறை­வா­கவே கிடைக்­கிறது. மேலும், ஒரு நிறு­வ­னத்­தில், நிரந்­தர பணி­யா­ளர்­கள் பெறும் சலு­கை­கள் அனைத்­தும், ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைப்­ப­தில்லை.இந்த முரண்­பா­டு­க­ளுக்கு, தற்­போது முடிவு கட்­டப்­பட்டு உள்­ளது. இனி, ஒப்­பந்­த­தா­ரர் தய­வின்றி, நிறு­வ­னங்­கள் நேர­டி­யாக தற்­கா­லிக பணி­யா­ளர்­களை நிய­மிக்­க­லாம். நிறு­வ­னத்­தின், ஒரு பிரி­வில் நிரந்­தர பணி­யா­ளர்­கள் பெறும் ஊதி­யம் மற்­றும் சலு­கை­களை, அதே பிரி­வின் தற்­கா­லிக தொழி­லா­ளர்­களும் பெற­லாம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
எதிர்ப்பை மீறி
பிர­த­மர் வாஜ்­பாய் தலை­மை­யி­லான மத்­திய அரசு, 2003ல், குறிப்­பிட்ட காலத்­திற்­கான தற்­கா­லிக பணி­யா­ளர் நிய­மன நடை­மு­றைக்கு அனு­மதி அளித்­தது. 2007ல், பிர­த­மர் மன்­மோ­கன் சிங் தலை­மை­யி­லான, ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி அரசு, தொழிற்­சங்­கங்­களின் நிர்ப்­பந்­தத்­திற்கு அடி­ப­ணிந்து, இந்த நடை­மு­றையை ரத்து செய்­தது. தற்­போது, பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு, மீண்­டும், ஒப்­பந்த தொழி­லா­ளர் நிய­மன நடை­மு­றைக்கு அனு­மதி அளித்­துள்­ளது.
பணி நேரம் - சலுகைகள்
குறிப்­பிட்ட காலத்­திற்கு ஒப்­பந்­தம் செய்­யப்­படும் தொழி­லா­ளர்­க­ளுக்கு, நிரந்­தர பணி­யா­ளர்­க­ளுக்கு நிக­ரான, பணி நேரம், ஊதி­யம் மற்­றும் சலு­கை­கள் கிடைக்­கும். ஒப்­பந்­தத்தை நீட்­டிக்­கா­வி­டின், நிறு­வ­னங்­கள், 'நோட்­டீஸ்' அளிக்­கத் தேவை­யின்றி, தொழி­லா­ளர்­கள் தன்­னிச்­சை­யா­கவே பணி வாய்ப்பை இழப்­பர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)