பதிவு செய்த நாள்
10 ஜன2018
04:21
மும்பை:மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு, கமாடிட்டி சந்தையில் முதலீடு செய்ய அனுமதி வழங்குவது குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' தீவிரமாக பரிசீலிக்கிறது.
இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பின் தலைவர், ஏ.பாலசுப்ரமணியன் கூறியதாவது:இந்தியாவில், 42 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் உள்ளன. இவை, 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிர்வகிக்கின்றன. இந்நிறுவனங்கள், பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில், முதலீடு செய்கின்றன. இத்துடன், கமாடிட்டி சந்தையிலும் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும் என, 2017ல், 'செபி' தெரிவித்திருந்தது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, மார்ச்சுக்குள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், கமாடிட்டி சந்தையில் களமிறங்குவது தொடர்பாக ஆலோசிக்கின்றன.'செபி' அனுமதி அளிக்கும்பட்சத்தில், இந்த ஆண்டு, கமாடிட்டி சந்தையில், ஒருசில மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் கால் பதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|