பதிவு செய்த நாள்
19 ஜன2018
05:35
மும்பை : ‘‘இனி, புதுமையான கண்டுபிடிப்புகளை அடையாளம் காண்பவருக்கே எதிர்காலம்,’’ என, இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்தார்.அவர், நேற்று காலை, மும்பை தாஜ் ஓட்டலில், இந்திய தொழிலதிபர்களுடன், சிற்றுண்டி கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது, அவர் பேசியதாவது:புதுமைகளை கண்டு பிடிப்பவர்களுக்கே, இனி எதிர்காலம். அதன்படி, இஸ்ரேலும், இந்தியாவும், எதிர்காலத்தை தனதாக்கி வருகின்றன. இதற்கான ஊக்குவிப்பை, பிரதமர் மோடியின் அரசும், என் அரசும் செய்து வருகின்றன.மோடிக்கும், எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அது போல, இஸ்ரேல் – இந்திய மக்களிடையே உண்மையான அன்பும், பாசமும் உள்ளது.இத்துடன், இரு நாடுகளின் தொழிலதிபர்கள், தொழில்நுட்ப தலைவர்கள், தொழில்முனைவோர் ஆகியோரிடமும், பரஸ்பர அன்பும், பரிவர்த்தனையும் மிகவும் முக்கியம் என, நான் கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், அஜய் பிரமல், ராகுல் பஜாஜ், அதி கோத்ரேஜ், ஆனந்த் மகிந்திரா, சந்தா கோச்சார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, மும்பை தாக்குதலில் பலியானோரின் நினைவிடத்தில், நெதன்யாஹு அஞ்சலி செலுத்தினார்.இதையடுத்து, யூதர் சமூகத்தினரை சந்தித்த அவர், பாலிவுட் நட்சத்திர கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|