பதிவு செய்த நாள்
23 ஜன2018
18:00
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் இன்று(ஜன., 23) முக்கியமான நாள். சென்செக்ஸ், நிப்டி முதன்முறையாக 36,000 மற்றும் 11,000 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தன.
கடந்த ஐந்து தினங்களாக தொடர் ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் வர்த்தகத்தை உயர்வுடன் துவங்கின. சில நிமிடங்களிலேயே புதிய உச்சத்தை எட்டின.
சர்வதேச பன்னாட்டு நிதியகம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018-ம் ஆண்டில் 7.4 சதவீதமும், 2019-ல் 7.8 சதவீதமும் இருக்கும் என கணித்திருப்பது, நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால் உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர் ஏற்றம் பெற்று வருவது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க எழுச்சி கண்டன. இதனால் புதிய உச்சத்துடன் பங்குச்சந்தைகள் நிறைவு பெற்றன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.97 புள்ளிகள் உயர்ந்து 36,139.98-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 117.50 புள்ளிகள் உயர்ந்து 11,083.70-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ (3.84%), டாடா ஸ்டீல்(3.72%), ஓஎன்ஜிசி(3.60%), ஐசிஐசிஐ.,(3.06%), கோல் இந்தியா(3.04%) போன்ற நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|