பதிவு செய்த நாள்
24 ஜன2018
18:10
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில் இன்றைய வர்த்தகம் ஏற்ற - இறக்கமாக இருந்தன. இருப்பினும் வர்த்தகம் சிறிய அளவில் ஏற்றம் கண்டு முடிந்தன.
முந்தைய நாட்களில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின. இருப்பினும் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்ந்தன. நாள் முழுக்க பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக நீடித்தன. இறுதியில் சிறு உயர்வுடன் பங்குச்சந்தைகள் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.66 புள்ளிகள் உயர்ந்து 36,161.64-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 2.30 புள்ளிகள் உயர்ந்து 11,086-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|