பதிவு செய்த நாள்
26 ஜன2018
04:03
மும்பை : எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், எஸ்.ஐ.பி., எனப்படும், தவணை முறையில் முதலீடு செய்யும் வசதியை, மேலும் விரிவுபடுத்தி உள்ளது. இதன்படி, பங்கு சார்ந்த ஐந்து மியூச்சுவல் பண்டு திட்டங்களில், நாள்தோறும்,குறைந்தபட்சம், 300 ரூபாய் முதலீடு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
எல்.ஐ.சி., – எம்.எப்., ஈக்யுட்டி பண்டு, எல்.ஐ.சி., எம்.எப்., குரோத் பண்டு, எல்.ஐ.சி., – எம்.எப்., மிட்கேப் பண்டு, எல்.ஐ.சி., –எம்.எப்., இன்ப்ராஸ்ட்ரக்சர் பண்டு, எல்.ஐ.சி., – எம்.எப்., இண்டெக்ஸ் பண்டு ஆகிய திட்டங்களில், தினமும் முதலீடு செய்யலாம்.
இத்துடன், எல்.ஐ.சி., எம்.எப்., பேலன்ஸ்டு பண்டு மற்றும் எல்.ஐ.சி., எம்.எப்., மன்த்லி இன்கம் பிளான் ஆகியவற்றிலும், தினமும் முதலீடு செய்யம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
‘இத்திட்டங்களில், ஒருவர், 22 நாட்களில் குறைந்தபட்சம், 6,600 ரூபாய் சேமிக்கலாம்’ என, எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|