பதிவு செய்த நாள்
30 ஜன2018
00:14
புதுடில்லி : இரண்டு மிகப் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவுக்கு வர இருக்கின்றன. அவை, மின்சாரத்தில் இயங்கும் பைக் மற்றும் பெட்ரோல், எத்தனால் இரண்டிலும் இயங்கும் பைக் என, இரண்டு விதமான பைக்குகளை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்த மாத இறுதிக்குள்ளாகவே, இரண்டு பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வருவதாக உறுதி அளித்துள்ளன. வெகு விரைவில் இந்த வாகனங்கள் நம் சந்தையில் அறிமுகம் ஆகும். 100 சதவீத பெட்ரோல் அல்லது, 100 சதவீத எத்தனால் மூலம் அவை இயங்கும்.
நம் நாடு, 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நிலையில், எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம், குறைந்தபட்சம், 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்க முடியும். மேலும், இந்த முயற்சி, விவசாய பொருளாதாரத்தை மாற்றி அமைக்கவும் உதவுவதாக இருக்கும்.
எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கையை உருவாக்கும் வேலையில், அரசு தீவிரமாக இருக்கிறது. எத்தனாலை, வைக்கோல், மூங்கில் உள்ளிட்ட, பலவற்றின் மூலமாக தயாரிக்கலாம். 1 டன் வைக்கோலில் இருந்து, 280 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|