பதிவு செய்த நாள்
03 பிப்2018
00:10
புதுடில்லி:சரக்கு போக்குவரத்தில், பிப்., 1ல் அமலுக்கு வந்த, ‘இ – வே பில்’ நடைமுறை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, துவக்க நாளன்றே முடங்கியது.இதையடுத்து,
இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள மத்திய அரசு,
பிரச்னைக்கு முழுமையாக தீர்வு கண்ட பின், அறிமுகப்படுத்த முடிவு
செய்துள்ளது.
முடங்கியது
ஒரு மாநிலத்திற்குள், 10 கி.மீ.,க்கு
மேற்பட்ட துாரத்திற்கும்; வெளி மாநிலத்திற்கும் எடுத்துச்
செல்லப்படும், 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள சரக்கிற்கு,
‘இ – வே பில்’ தயாரிக்க வேண்டும்.முதற்கட்டமாக,
மாநிலங்களுக்கு இடையே, சரக்கு போக்குவரத்திற்கான, ‘இ – வே பில்’
திட்டம், தமிழகம் உட்பட, பெரும்பான்மையான மாநிலங்களில், பிப்.,
1ல் அமலுக்கு வந்தது.
சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள்,
தயாரிப்பு நிறுவனங்கள், www.ewaybill.nic.in வலைதளத்தில்,
அவற்றின், ஜி.எஸ்.டி.ஐ.என்., எண்ணை குறிப்பிட்டு, பதிவு செய்து, ‘இ – வே
பில்’ தயாரிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதை
பின்பற்றி, ஒரே சமயத்தில் லட்சக்கணக்கானோர், ‘இ – வே பில்’
தயாரிக்க முனைந்ததால், சிறிது நேரத்திலேயே, வலைதளம் முடங்கியது.ஏராளமான நிறுவனங்கள், ‘இ – வே பில்’ தயாரிக்க முடியாமல், சரக்குகளை அனுப்ப வழி தெரியாது தவித்தன.
இது தொடர்பான புகார்கள் வந்த உடனே, ‘இ – வே பில்’ அமலாக்கத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, மத்திய அரசு அறிவித்தது.இது குறித்து, மத்திய நிதித் துறை செயலர், ஹஷ்முக் ஆதியா கூறியதாவது:
‘இ – வே பில்’ நடைமுறையில்
ஏற்பட்ட பாதிப்பிற்கான காரணம் குறித்து, வரி பரிவர்த்தனைகளை
கையாளும், ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தின் தலைவர், ஏ.பி.பாண்டேவிடம்
விளக்கம் கோரப்பட்டு உள்ளது.உறுதிதொழில்நுட்பக் கோளாறை சரி
செய்து, மீண்டும், ‘இ – வே பில்’ நடைமுறையை அமல்படுத்த, எத்தனை
நாட்கள் ஆகும் என்பது குறித்து, விரிவான அறிக்கை அளிக்குமாறு,
அவரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோதனையின் போது, இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டது.
துவக்க நாளன்று, ஒரு மணி நேரத்தில், 2- – 3 லட்சம், ‘இ – வே பில்’கள் தயாரித்ததால், ‘சர்வர்’ முடங்கி உள்ளது.இது தெரிய வந்ததும், தொழில் நிறுவனங்களும், சரக்கு போக்குவரத்து
நிறுவனங்களும் சிரமப்படக் கூடாது என்ற நோக்கத்தில், உடனடியாக திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜி.எஸ்.டி.என்.,
அமைப்பு, இம்மாத மத்தியில், மீண்டும் இத்திட்டத்தை,
செயல்பாட்டிற்கு கொண்டு வரும் என, எதிர்பார்க்கிறோம். அப்போது, எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படக் கூடாது என, உறுதி அளிக்க வேண்டும் என, பாண்டேவிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினசரி 1.40 லட்சம்
ஏற்கனவே,
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய நான்கு
மாநிலங்களில், ‘இ – வே பில்’ நடைமுறை அமலுக்கு வந்து விட்டது.
இம்மாநிலங்கள், தினமும், 1.40 லட்சம், ‘இ – வே பில்’களை
தயாரிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|