‘ஏர் – இந்தியா’ நிறுவனம் விற்பனை ஜூன் மாதத்திற்குள் அரசு முடிவு ‘ஏர் – இந்தியா’ நிறுவனம் விற்பனை ஜூன் மாதத்திற்குள் அரசு முடிவு ... ஜி.எஸ்.டி.,  அறி­வோம் -– தெளி­வோம் ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம் ...
சரக்கு போக்குவரத்தில் புதிய நடைமுறை துவங்கிய நாளன்றே தடங்கல் ‘இ – வே பில்’ தற்காலிக வாபஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2018
00:10

புதுடில்லி:சரக்கு போக்­கு­வ­ரத்­தில், பிப்., 1ல் அம­லுக்கு வந்த, ‘இ – வே பில்’ நடை­முறை, தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக, துவக்க நாளன்றே முடங்­கி­யது.இதை­ய­டுத்து, இத்­திட்­டத்தை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யுள்ள மத்­திய அரசு, பிரச்­னைக்கு முழு­மை­யாக தீர்வு கண்ட பின், அறி­மு­கப்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது.

முடங்கியது

ஒரு மாநி­லத்­திற்­குள், 10 கி.மீ.,க்கு மேற்­பட்ட துாரத்­திற்­கும்; வெளி மாநி­லத்­திற்­கும் எடுத்­துச் செல்­லப்­படும், 50 ஆயி­ரம் ரூபாய்க்கு அதி­க­மான மதிப்­புள்ள சரக்­கிற்கு, ‘இ – வே பில்’ தயா­ரிக்க வேண்­டும்.முதற்­கட்­ட­மாக, மாநி­லங்­க­ளுக்கு இடையே, சரக்கு போக்­கு­வ­ரத்­திற்­கான, ‘இ – வே பில்’ திட்­டம், தமி­ழ­கம் உட்­பட, பெரும்­பான்­மை­யான மாநி­லங்­களில், பிப்., 1ல் அம­லுக்கு வந்­தது.

சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள், தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், www.ewaybill.nic.in வலை­த­ளத்­தில், அவற்­றின், ஜி.எஸ்.டி.ஐ.என்., எண்ணை குறிப்­பிட்டு, பதிவு செய்து, ‘இ – வே பில்’ தயா­ரிக்­க­லாம் என, தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.அதை பின்­பற்றி, ஒரே சம­யத்­தில் லட்­சக்­க­ணக்­கா­னோர், ‘இ – வே பில்’ தயா­ரிக்க முனைந்­த­தால், சிறிது நேரத்­தி­லேயே, வலை­த­ளம் முடங்­கி­யது.ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள், ‘இ – வே பில்’ தயா­ரிக்க முடி­யா­மல், சரக்­கு­களை அனுப்ப வழி தெரி­யாது தவித்­தன.

இது தொடர்­பான புகார்­கள் வந்த உடனே, ‘இ – வே பில்’ அம­லாக்­கத்தை, தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைப்­ப­தாக, மத்­திய அரசு அறி­வித்­தது.இது குறித்து, மத்­திய நிதித் துறை செய­லர், ஹஷ்­முக் ஆதியா கூறி­ய­தா­வது:

‘இ – வே பில்’ நடை­மு­றை­யில் ஏற்­பட்ட பாதிப்­பிற்­கான கார­ணம் குறித்து, வரி பரி­வர்த்­த­னை­களை கையா­ளும், ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னத்­தின் தலை­வர், ஏ.பி.பாண்­டே­வி­டம் விளக்­கம் கோரப்­பட்டு உள்­ளது.உறுதிதொழில்­நுட்­பக் கோளாறை சரி செய்து, மீண்­டும், ‘இ – வே பில்’ நடை­மு­றையை அமல்­ப­டுத்த, எத்­தனை நாட்­கள் ஆகும் என்­பது குறித்து, விரி­வான அறிக்கை அளிக்­கு­மாறு, அவ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. சோத­னை­யின் போது, இத்­திட்­டம் வெற்­றி­க­ர­மாக செயல்­பட்­டது.

துவக்க நாளன்று, ஒரு மணி நேரத்­தில், 2- – 3 லட்­சம், ‘இ – வே பில்’கள் தயா­ரித்­த­தால், ‘சர்­வர்’ முடங்கி உள்­ளது.இது தெரிய வந்­த­தும், தொழில் நிறு­வ­னங்­களும், சரக்கு போக்­கு­வ­ரத்து
நிறு­வ­னங்­களும் சிர­மப்­ப­டக் கூடாது என்ற நோக்­கத்­தில், உட­ன­டி­யாக திட்­டம் நிறுத்தி வைக்­கப்­ப­டு­வ­தாக, அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது.

ஜி.எஸ்.டி.என்., அமைப்பு, இம்­மாத மத்­தி­யில், மீண்­டும் இத்­திட்­டத்தை, செயல்­பாட்­டிற்கு கொண்டு வரும் என, எதிர்­பார்க்­கி­றோம். அப்­போது, எந்­த­வி­த­மான பிரச்­னை­களும் ஏற்­ப­டக் கூடாது என, உறுதி அளிக்க வேண்­டும் என, பாண்­டே­வி­டம் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
இவ்­வாறு அவர் கூறி­னார்.

தினசரி 1.40 லட்சம்

ஏற்­க­னவே, கேரளா, கர்­நா­டகா, ராஜஸ்­தான், உத்­த­ர­கண்ட் ஆகிய நான்கு மாநி­லங்­களில், ‘இ – வே பில்’ நடை­முறை அம­லுக்கு வந்து விட்­டது. இம்­மா­நி­லங்­கள், தின­மும், 1.40 லட்­சம், ‘இ – வே பில்’களை தயா­ரிக்­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)