பதிவு செய்த நாள்
05 பிப்2018
00:21
மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், முதலீடு மற்றும் வரி சேமிப்பு நோக்கில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன. வரி சேமிப்பில் உதவக்கூடிய பட்ஜெட் அறிவிப்புகள் இவை:
வீட்டை விற்க திட்டமிட்டிருந்தால், அதை வாங்கிய பின், இரண்டு ஆண்டுகள் பொறுத்திருக்கவும். ஏனெனில் அதன் பிறகு வீட்டு விற்பனை மூலமான லாபம் நீண்ட கால நோக்கிலான மூலதன ஆதாயமாக கருதப்படும். இதன் மூலம் குறைந்த வரி விதிப்பு பொருந்தும்.
பங்குகள் மூலமான ஈவுத்தொகை வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு, 10 சதவீத வரி உண்டு. மியூச்சுவல் பண்ட் திட்டங்களுக்கான ஈவுத்தொகை வருமானத்திற்கு வரி கிடையாது.
ஐந்து ஆண்டு தொடர்ந்து பணியில் இருந்து பிறகு கிடைக்கும், ‘கிராஜுவட்டி’ தொகைக்கு பத்து லட்சம் ரூபாய் வரை விலக்கு உண்டு. ஆனால், இது தனிநபரின் வாழ்நாளில் பெறக்கூடிய மொத்த கிராஜுவட்டி தொகைக்கு பொருந்தும்.
பணியாற்றும் அலுவலகம் திரும்பி அளிக்கும் தொலைபேசி மற்றும் இணைய பயன்பாடு கட்டணத்திற்கான தொகை வரி செலுத்துபவரின் கணக்கில் வராது.
80 டி பிரிவின் கீழ் தனிநபர் மற்றும் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டு தொகைக்காக, 25,000 ரூபாய் விலக்கு பெறலாம். மூத்த குடிமகன்களுக்கு இது, 50,000 ரூபாயாகும்.
பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு பெற்றிருந்தால் கூடுதலாக, 25,000 ரூபாய் விலக்கு பெறலாம். மூத்த குடிமகன்களை பொருத்தவரை, வைப்பு நிதி மூலம் வரும் வட்டி வருமானத்திற்கான விலக்கு, 50,000 ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|