மெய்நிகர் கரன்சிகள் ஒரு மோசடி: உலக வங்கி தலைவர்மெய்நிகர் கரன்சிகள் ஒரு மோசடி: உலக வங்கி தலைவர் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு ...
பொது துறை வங்கிகளில் புதிய வாராக்கடன் பெருகவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
21:14

புதுடில்லி : ‘‘பொதுத் துறை வங்­கி­களில், புதிய வாராக்­க­டன் பெரு­க­வில்லை,’’ என, பிர­த­ம­ரின் பொரு­ளா­தார ஆலோ­சனை குழு தலை­வர், பிபேக் தெப்­ராய் தெரி­வித்து உள்­ளார்.

‘நடப்பு, 2017 – -18ம் நிதி­யாண்­டில், ஜூலை – செப்., காலாண்டு நில­வ­ரப்­படி, பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன், 7.34 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது’ என, ரிசர்வ் வங்கி தெரி­வித்து உள்­ளது.இந்­நி­லை­யில், 2017ல் அறி­மு­க­மான, நிறு­வன திவால் சட்­டம் மூலம், பல நிறு­வ­னங்­களின் சொத்­து­களை விற்று, வாராக்­க­டனை வசூ­லிக்­கும் பணியை, பொதுத் துறை வங்­கி­கள் முடுக்கி விட்­டுள்ளன.

மேலும், கடன் தவ­ணையை செலுத்த தவ­றும் நிறு­வ­னங்­க­ளுக்கு, துவக்க நிலை­யி­லேயே எச்­ச­ரிக்கை விடுத்து, கடனை வசூ­லிக்­கும் நட­வ­டிக்­கை­யி­லும் இறங்கி உள்ளன. அத­னால், வங்­கி­களின் வாராக்­க­டன் பட்­டி­ய­லில், நிறு­வ­னங்­களின் சேர்க்கை கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு, புதிய வாராக்­க­டன்­கள் உரு­வா­வது குறைந்து உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து, பிபேக் தெப்­ராய் கூறி­ய­தா­வது: பொதுத் துறை வங்­கி­களின் கணக்கு ஏடு­கள் தவிர்த்து, மெய்­நி­கர் அள­வில், புதிய வாராக்­க­டன்­கள் பெரு­கு­வது நின்று விட்­டது. தீவி­ர­மான கடன் வசூ­லிப்பு நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக, பல நிறு­வ­னங்­களின் வாராக்­க­டன் நிலு­வை­யில் மாறு­தல் ஏற்­பட்­டுள்­ளது.

அத­னால், பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன், 3 லட்­சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்­காது என, நான் கரு­து­கி­றேன். வரு­மான வரி மற்­றும் இதர நேரடி வரி­களை நீக்கி, அவற்றை மறை­முக வரி­களில் சேர்ப்­பது சாத்­தி­யமே. இந்­தியா போன்ற ஏழை நாடு­களில், மறை­முக வரி­களை கண்­கா­ணிப்­ப­தும் சுல­பமே.

இந்­தி­யா­வில், தனி­ந­பர்­கள் வரு­மான வரி செலுத்­து­வது குறை­வாக உள்­ளது. ஊர­கத் துறை முழு­வ­தும், வரி விதிப்­பின் கீழ் கொண்டு வரப்­ப­டா­ததே, வரு­மான வரி வரு­வாய் குறை­வாக உள்­ள­தற்கு கார­ணம். அது, மாநில அர­சு­களின் அதி­கா­ரத்­திற்கு உட்­பட்­டது என்­ப­தால், மத்­திய அர­சால் ஒன்­றும் செய்ய முடி­யாது.

பண்ணை வரு­வாய்க்கு வரி விலக்கு அளிக்­கப்­ப­டு­வ­தன் கார­ண­மா­கவே, அர­சுக்கு, வரு­மான வரி வாயி­லான வரு­வாய் குறை­வாக உள்­ளது. பண்ணை வரு­வா­யில், குறிப்­பிட்ட வரம்­பிற்கு மேற்­பட்ட தொகைக்கு வரி விதிக்­க­லாம். ஆனால், பல வல்­லு­னர்­கள் இதை வலி­யு­றுத்­தா­மல் இருப்­பது, வருந்­தத்­தக்­கது.

நம்­மில் எவ்­வ­ளவு பேர், பண்ணை வரு­வாய்க்கு வரி விதிக்க ஆத­ரவு தெரி­விப்­பர் என்­பது தான், என் கேள்வி. அவ்­வாறு வரி விதிக்­கப்­பட்­டா­லும், அது­வும் குறிப்­பிட்ட வருவாய் வரம்­பிற்கு மேற்­பட்டு தான் இருக்க வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

என்ன காரணம்?
நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் நிதி பற்­றாக்­குறை, இலக்கு அள­வான, 3.2 சத­வீ­தத்தை விட, உயர்ந்து, 3.5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. ஜி.எஸ்.டி., 11 மாதங்­க­ளுக்கு மட்­டுமே கணக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தால், நிதி பற்­றாக்­குறை அதி­க­ரித்­துள்­ளது. இல்­லை­யென்­றால், 3.2 சத­வீ­தத்தை நெருங்கி இருக்­கும்.
-பிபேக் தெப்ராய் ,பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)