பதிவு செய்த நாள்
09 பிப்2018
09:53
மும்பை : அமெரிக்க பங்குச்சந்தையான டவ்ஜோன்ஸ் கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் துவக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் துவங்கி உள்ளன.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (பிப்.,09), நிப்டி 10,400 புள்ளிகள் என்ற நிலையை எட்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 410.71 புள்ளிகள் சரிந்து 34,002.45 புள்ளிகளாகவும், நிப்டி 160.40 புள்ளிகள் சரிந்து 10,416.50 புள்ளிகளாகவும் இருந்தன.
இருப்பினும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை காரணமாக பங்குச்சந்தைகள் துவங்கிய சிறிது நேரத்திலேயே (9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 526.26 புள்ளிகள் சரிந்து 33,886.90 புள்ளிகளையும், நிப்டி 177.50 புள்ளிகள் சரிந்து 10,399.40 புள்ளிகளையும் எட்டின. இது முதலீட்டாளர்களிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|