பதிவு செய்த நாள்
15 பிப்2018
00:41
மும்பை:பஞ்சாப்
நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு
நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்வெளியானதை அடுத்து, நேற்று, இவ்வங்கியின் பங்கு விலை, கடுமையாக வீழ்ச்சி கண்டது.
இதனால், இப்பங்குகளில் முதலீடு செய்தோருக்கு, நேற்று ஒரே நாளில், 3,௮00 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி உயரதிகாரிகள், மும்பை, பரோடியில் உள்ள வங்கி கிளையில், 5ம் தேதி, ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது,
வங்கி அதிகாரிகளான, கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் ஹனுமந்த் கராட்
ஆகியோர், சில வாடிக்கையாளர்களுக்கு, ஏற்றுமதிக்கான கடன்
பொறுப்பேற்பு ஆவணங்களில் மோசடி செய்தது தெரிந்தது.
நடந்தது என்ன?
இந்த மோசடி காரணமாக, வங்கிக்கு, 280 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இதையடுத்து,
வங்கி அளித்த புகாரின்படி, டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார்
எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட் ஆகிய நிறுவனங்களின்
பங்குதாரர்களான, நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல்
சின்னுபாய் சோக்சி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில்,
சி.பி.ஐ., மேற்கொண்டு நடத்திய விசாரணையில், 11 ஆயிரம் கோடி ரூபாய்
அளவிற்கு, ‘மெகா’ மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து,
பஞ்சாப் நேஷனல் வங்கி, நேற்று, மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பி உள்ள
அறிக்கை:
மும்பை பரோடி கிளையில், முறைகேடு நடந்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒருசில வாடிக்கையாளர்கள் ஆதாயம்
அடைவதற்காக, அதிகாரபூர்வமற்ற தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.அவற்றின் அடிப்படையில், இதர வங்கிகள், வெளிநாடுகளில் உள்ள அந்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி உள்ளன.
விசாரணை
வழக்கமான வங்கி நடைமுறைகள் போன்றே, இந்த பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இந்த வகையில், 177 கோடி டாலர் அளவிற்கு, மோசடி பரிவர்த்தனைகள் நடந்து உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.இதில்,
வங்கிக்கு உள்ள பொறுப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மை
உள்ளிட்டவை, சட்ட விதிமுறைகளின்படி முடிவு செய்யப்படும்.
இந்த மோசடி குறித்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்
தரும்படி, சி.பி.ஐ.,யிடம், வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.வங்கி, ஒளிவுமறைவற்ற, துாய்மையான செயல்பாடுகளை தொடர்ந்து பேணும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், முன்தினத்தை விட, நேற்று, பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை, 9.81 சதவீதம் குறைந்து,145.80 ரூபாயில் நிலை பெற்றது. மோசடி தொகை, வங்கியின் மொத்த சந்தை மூலதனமான, 36 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு பங்கு; 4.5 லட்சம் கோடி ரூபாய் மொத்த கடனில், 2.55 சதவீதம் ஆகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|