பதிவு செய்த நாள்
17 பிப்2018
00:10
புதுடில்லி : ‘பங்கு வெளியீட்டில், தகுதி உள்ள சில்லரை முதலீட்டாளருக்கு, பங்கு ஒதுக்கீடு செய்யாவிட்டால், தவறுக்கு காரணமான வணிக வங்கி, இழப்பீடு வழங்க வேண்டும்’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்து உள்ளது.
சில்லரை முதலீட்டாளர்கள் தொடர்பாக, ‘செபி’ வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்: பங்கு வெளியீட்டில், சில்லரை முதலீட்டாளருக்கு, தகுதி இருந்தும் பங்கு ஒதுக்கீடு செய்யாவிட்டால், பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் வணிக வங்கிகள் இழப்பீடு தர வேண்டும்
* பங்குகளை ஒதுக்க தவறியதால், முதலீட்டாளருக்கு பறிபோன வாய்ப்பு; பங்கு ஒதுக்கி இருந்தால், பட்டியல் நாளன்று கிடைத்திருக்க கூடிய லாபம் என்பது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும்
* பங்கு விண்ணப்பங்கள், 90 – 100 சதவீதத்திற்குள் இருந்தால், அதாவது, நிர்ணயிக்கப்பட்டதற்கு மேலாக விண்ணப்பங்கள் வரவில்லையென்றால், சில்லரை முதலீட்டாளருக்கு ஒதுக்கி இருக்கக் கூடிய பங்குகளுக்கு, இழப்பீடு தர வேண்டும்
* பட்டியல் நாளன்று, வெளியீட்டு விலையை விட, பங்கு விலை குறைந்தால், இழப்பீடு தர தேவையில்லை
* பங்கு விண்ணப்பத்துடன் செலுத்தும் தொகை, பங்கு ஒதுக்கீடு வரை, முதலீட்டாளர் கணக்கு வைத்துள்ள வங்கியின் பொறுப்பில் இருக்கும். இதில், வங்கி செய்யும் தவறால், பங்கு ஒதுக்கீடு பெற முடியாத சில்லரை முதலீட்டாளர்கள், மூன்று மாதங்களுக்கு உள்ளாக, வங்கியில் புகார் தெரிவிக்கலாம்
* வங்கி, 15 நாட்களுக்குள் புகாருக்கு தீர்வு காண வேண்டும். தவறினால், ஆண்டுக்கு, 15 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்
* பங்கு ஒதுக்கீடு தொடர்பாக, நிலுவையில் உள்ள புகார்கள் அனைத்திற்கும், ‘செபி’யின், SCORES வலைதளம் அல்லது இதர வகையில், வங்கிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|