மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வுமாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு ... 1,000 நிறுவனங்கள் பாதிக்கப்படும்; ரப்பர் தொழில் துறையினர் கோரிக்கை 1,000 நிறுவனங்கள் பாதிக்கப்படும்; ரப்பர் தொழில் துறையினர் கோரிக்கை ...
பங்கு ஒதுக்கீட்டில் பாதிப்பா: இழப்பீடு தர, ‘செபி’ உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2018
00:10

புதுடில்லி : ‘பங்கு வெளி­யீட்­டில், தகுதி உள்ள சில்­லரை முத­லீட்­டா­ள­ருக்கு, பங்கு ஒதுக்­கீடு செய்­யா­விட்­டால், தவ­றுக்கு கார­ண­மான வணிக வங்கி, இழப்­பீடு வழங்க வேண்­டும்’ என, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ தெரி­வித்து உள்­ளது.

சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள் தொடர்­பாக, ‘செபி’ வெளி­யிட்­டுள்ள புதிய விதி­மு­றை­கள்: பங்கு வெளி­யீட்­டில், சில்­லரை முத­லீட்­டா­ள­ருக்கு, தகுதி இருந்­தும் பங்கு ஒதுக்­கீடு செய்­யா­விட்­டால், பங்கு வெளி­யீட்டை நிர்­வ­கிக்­கும் வணிக வங்­கி­கள் இழப்­பீடு தர வேண்­டும்

* பங்­கு­களை ஒதுக்க தவ­றி­ய­தால், முத­லீட்­டா­ள­ருக்கு பறி­போன வாய்ப்பு; பங்கு ஒதுக்கி இருந்­தால், பட்­டி­யல் நாளன்று கிடைத்­தி­ருக்க கூடிய லாபம் என்­பது உள்­ளிட்ட அம்­சங்­களின் அடிப்­ப­டை­யில், இழப்­பீடு நிர்­ண­யிக்க வேண்­டும்

* பங்கு விண்­ணப்­பங்­கள், 90 – 100 சத­வீ­தத்­திற்­குள் இருந்­தால், அதா­வது, நிர்­ண­யிக்­கப்­பட்­ட­தற்கு மேலாக விண்­ணப்­பங்­கள் வர­வில்­லை­யென்­றால், சில்­லரை முத­லீட்­டா­ள­ருக்கு ஒதுக்கி இருக்­கக் கூடிய பங்­கு­க­ளுக்கு, இழப்­பீடு தர வேண்­டும்

* பட்­டி­யல் நாளன்று, வெளி­யீட்டு விலையை விட, பங்கு விலை குறைந்­தால், இழப்­பீடு தர தேவை­யில்லை

* பங்கு விண்­ணப்­பத்­து­டன் செலுத்­தும் தொகை, பங்கு ஒதுக்­கீடு வரை, முத­லீட்­டா­ளர் கணக்கு வைத்­துள்ள வங்­கி­யின் பொறுப்­பில் இருக்­கும். இதில், வங்கி செய்­யும் தவ­றால், பங்கு ஒதுக்­கீடு பெற முடி­யாத சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள், மூன்று மாதங்­க­ளுக்கு உள்­ளாக, வங்­கி­யில் புகார் தெரி­விக்­க­லாம்

* வங்கி, 15 நாட்­க­ளுக்­குள் புகா­ருக்கு தீர்வு காண வேண்­டும். தவ­றி­னால், ஆண்­டுக்கு, 15 சத­வீத வட்­டி­யு­டன் வழங்க வேண்­டும்

* பங்கு ஒதுக்­கீடு தொடர்­பாக, நிலு­வை­யில் உள்ள புகார்­கள் அனைத்­திற்­கும், ‘செபி’யின், SCORES வலை­த­ளம் அல்­லது இதர வகை­யில், வங்­கி­கள் உட­ன­டி­யாக தீர்வு காண வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)